பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

27

 வருவார்-நாளை காலை உனக்கு எல்லாம் தெரிவிக்கிறேன்- இப் பொழுது நல்ல பிள்ளையைப்போல் கொஞ்சம் தூங்கு, என்றார்கள். இப்படிச் சொல்லிவிட்டு தன்கையால் மிருதுவாக என்னைத்தடவிக் கொடுத்தார்கள். அப்பொழுது, அவர்கள் நெற்றியில் அணிந்திருந்த பெரிய குங்குமப்பொட்டை உற்றுப்பார்த்து விட்டு, ஒருவாறு சந்தேகம் நீங்கினவனாய் உறங்கி விட்டேன்.


ஒரு வாரம் பொறுத்து என்னை ஆஸ்பத்திரியினின்றும் விடுதலை செய்து விட்டார்கள், உடனே நாங்கள் இருவரும் மதுரைப்போய்ச் சேர்ந் தோம், கூட்ஸ் ஷெட் (goods shed) தெருவிலிருக்கும் எங்கள் பழைய வீட்டிற்கு-போனோம். அவ்விடம் போன பிறகு தான், கடவுளின் கிருபையால் நான் எனக்கு நேரிட்ட ஆபத்தினின்று காப்பாற்றப் பட்டேன் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத் தெரிவித்தார்கள். நான் வெடி குண்டினால் காயப்பட்டு பிழைக்க மாட்டாத கஷ்ட திசை யில், சென்னையில் ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும், உடனே வந்து காண வேண்டுமென்றும் தனக்கு தந்தி வந்ததாம், நான் அவர்கள் பெயரைச் சொல்லி அடிக்கடி கூப்பிட்டுக் கொண்டிருந்தேனாம்உடனே புறப்பட்டு வந்து என்ன சென்னையில் பார்த்தார்களாம் : அப்பொழுது அவர்களை நான் இன்னாரென்று கண்டுபிடிக்க முடியாமல், என் மாறாட்டத்தில் அவர்களைக் காணவேண்டும் காணவேண்டும், என்று கத்திக் கொண்டிருந்தேனாம், என் தகப்பனாரையும் காண வேண்டுமென்று பிதற்றிக்கொண்டிருந்தேனாம் , அன்றியும் ஏதோ ஆறு பழங்களைப்பற்றி அடிக்கடி உளறிக்கொண்டிருந்தேனாம். என்னைப் பார்த்து வந்த வயித்தியர், நான் பிழைப்பது கஷ்டம் என்று கூறினா ராம் எந்தசணம் என் உயிர் போகுமோ என்று திகிலடைந்தார் களாம், இப்படி பல நாள் என் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த போது, ஒரு நாள் வயித்தியர், நான் யாரையாவது இன்னாரென்று தெரிந்துகொள்ளும்படியான சக்திவந்தால்,ஒரு வேளை நான் பிழைக்க கூடும் என்று தெரிவித்தாராம். பகலிரவு ஓயாமல் என்படுக்கையின் பக்கத்தில் உட்கார்ந்துக்கொண்டு, நான் ஓயாமல் கூவிக்கொண்டிருக் கும் என் தாயார் தன்தானென்று நான் அறியும்படி தன்னாலான சூழ்ச்சிகளெல்லாம் செய்துபார்த்தார்களாம் கடைசியில் தெய்வா தீனத்தால் ஒரு நாள் நான் முன்பு கூறியபடி தன்னை அறிந்துக் கொண்டேனாம்.


இதுவரையில், நான் என் தகப்பனாரைப் பற்றிக் கேட்கும் போதெல்லாம் 'அவர் ஸ்வாமியின் கிருபையால் ஒரு நாள் நம்மிடம் வந்து சேர்வார் அதைப் பற்றிக் கவலைப்படாதே' என்று சொல்லி நான் பன்முறை கேட்டும் வேறொன்றும் தெரிவிக்கவில்லை, ஆகவே என் மனதில் வருத்தமிருந்த போதிலும், நான் கேட்கும்