பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

40

40 வானவர் "மிகவும் சந்தோஷம், நல்ல வேலை செய்தாய் அப்பையன் அதற்காக உனக்கு ஏதாவது வந்தனம் செய்தானா?,) என்று கேட்க, 'அவன் ஒன்றும் சொல்லவில்லை, அழுகையை நிறுத்தி விட்டு, சிரித் துக்கொண்டு, ஓடிப்போய் விட்டான் ' என்று சிஷ்யன் பதில் சொன்னான். அப்போது, குருவானவர் அப்பா நேற்று, இவ்வுலகத் தில் பணக்காரர்களும், உயர்ந்த பதவியிலிருப்பவர்களும் தான் உலகத் திற்கு உபகாரம் செய்ய முடியும். ஏழைகளாகிய நம்மால் என்ன செய்ய முடியும் என்று சந்தேகப் பட்டாயே அதற்கு பதில் இதுதான்" என்றார்.


17. " சுவாமி, உத்தம புருஷன் என்று நீங்கள் சில சமயங் களில் கூறி யிருக்கிறீர்கள், அந்த உத்தம புருஷன் எப்படிப் பட்டவனாய் இருப்பான் என்று தயவு செய்து தெரிவிக்க வேண்டும் ' என்று ஒரு நாள் சிஷ்யன் கேட்க, குரு இவ்வாறு பதில் சொன்னார்; " உத்தம புருஷன் என்றால் நல் அறிவும், நற்குணமும், நன் நடத்தையும் நிறைந்தவனாய் இருக்கவேண்டும் ஒரு உத்தம புரு ஷனை பல விதமாக வர்ணிக்கலாம். ஒரு உதாரணம் கூறுகிறேன் கேள்.-பழங்காலத்து பெரியார் ஒருவர் மனிதர்களை மூன்று விதமாக பிரித்திருக்கிறார். (1) எவன் ஒருவன் மற்றவர்கள் கெட்டு தான் மாத்திரம் வாழ வேண்டு மென்று நினைக்கிறானோ அவன் அதமனாவான். (2) எவன் ஒருவன் மற்றவர்களும் வாழ வேண்டும் தானும் வாழ வேண்டும் என எண்ணுகிறானோ அவன் மத்தியமன். (3) எவன் ஒரு வன் நமக்கு கேடு வந்தாலும் வரட்டும் மற்றவர்களாவது நன்றாக வாழட்டும் என்று எண்ணுகிறானோ அவன்தான் உத்தமன் நீ உத்தம புருஷனுடைய எல்லா குணங்களையும் அறிய வேண்டும் என்று விரும் பினால் வால்மீகி ராமாயணத்தை எடுத்து நீ ராமருடைய குணாதிசயங் களை நன்றாய் கவனித்துப் பார்' என்றார்.


18. சிஷ்யன் பெரியவனாகி, குருவின் ஆக்கினைப்படிகலியாணம் செய்து கொண்டு இல்லறம் நடத்தலானான் அப்படி அவன் நடத்தும் காலத்தில் குருவானவர், அவர் வழக்கப்படி சிஷ்யன் பிறந்த நாளில், சிஷ்யன் வீட்டிற்கு உணவு கொள்ள வந்தார், வந்தவரை உபசரித்து போஜனம் கொள்ளும்படிச் செய்தவுடன், குருவானவர் சிஷ்யனை ஆசிர்வதித்துவிட்டு, விடைபெற்றுப் போகுமுன் அப்பா, உன் மனதில் ஏதாவது குறை இருந்தால் கேள் என்று கேட்க சிஷ்யன் 'சுவாமி சென்ற வருஷம் சில மாதங்கள் ஜ்வரத்தினால் பீடிக்கப்பட்டு கஷ்டப் பட்டேன் அம்மாதிரி நான் இனி கஷ்டப்படாதிருக்கும்படி ஆசிர் வதியுங்கள் என்று சொன்னான். அதற்கு அவர்' அப்பா!, பரமாத்மா, உன்