புதுக்கவிதை - சமுதாய நோக்கில் 99
ஆம்.
தேர்தல் ஓட்டத்தில்...
இந்தத் தலைவர்கள் மீது
பந்தயம் கட்டியே -
கட்சித் தொண்டர்கள்
கைக்காசை
இழக்கின்றார்கள்!
இவர்கள் -
நிஜக் குதிரைகளல்ல!
மைய அரசின்
நையாண்டி மேளத்திற் கேற்ப.
பொது நடனம்
புரியும் - பொய்க்கால் குதிரைகள்!"
இவர்கள் பற்றிய கருத்து ஏற்கெனவே நம் மனத்தில் குடியேறியிருப்பதால் கவிஞர் இதனைத் தம் கவிதையில் ஏற்றி பவனி வரச் செய்யுங்கால் அது நம் அங்கீகாரம் பெறுகின்றது; இதனால் கவிதையும் சிறப்படைகின்றது.
விலைவாசி: இத்தலைப்பில் எத்தனை கவிதைகள் வேண்டு மானாலும் பிறக்கும். குடும்பக் கட்டுப்பாடு இங்கு இல்லை. விலை வாசி' என்ற தலைப்பில் ஒரு கவிதை,
விற்போரின்
முதலிரவு
வாங்குவோரின்
வயிற்றெரிச்சல்
ஆள்வோரின்
அனாதைகள்
எதிர்த் தரப்பின்
ஏக வாரிசுகள்.
6. வாலி: பொய்க்கால் குதிரைகள் - பக். 153 - 154, 7. கதம்பம் (முருகன்) பக். 25.