பக்கம்:பல்சுவை விருந்து.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமராசர் பற்றிய நினைவுகள் 165

வருத்தத்தைத் தருகின்றது. 'போகட்டும். கல்விப் பேரவை சுமார் 250 உறுப்பினர்கள் கொண்டது. ஆனால் மக்கள் கூட்டம் எண்ணற்றவர்களைக் கொண்டது. அவர்கள் கருத்தில் இத் தீர்மானம் இருக்கட்டும்” என்று கருதி இதனை இக் கட்டுரையில் பதிவு செய்தேன். இது நூலாக வடிவம் பெறுவதால் மக்கள் மனத்தில் வரலாறு படைத்துக் கொண்டே இருக்கும்.

'தொண்டே செய்து வழியொழுக பண்டே பரமன் பணித்த பணி வகையே" என்ற ஆழ்வார் வாக்கிற்கொப்ப பணி செய்து வாழ்ந்த காமராசர் பெயர் தமிழ்மொழி உள்ள அளவும் மக்கள் மனத்தில் நிலை பெற்று நிலவட்டும்; மன்பதைக்கு அவர் வழிகாட்டியாக இருந்து வரட்டும்.