பக்கம்:பல்சுவை விருந்து.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராஜாஜி பற்றிய நினைவுகள் 175

எனினும் இதையும் மகிழ்ச்சியானதாகக் கொண்டு செயற் படுவார்களாம். 'இனிமா பயன்படுத்துவதால் குடல் நிர்மலமாகி விடுகிறது. இயல்பாகக் கழிப்பவர்கள் குடலில் அங்ங்னம் தூய்மையாவதில்லை' என்று நம்மை நோக்கி அந்த மகான் கூறும்போது உதட்டில் மகிழ்ச்சி காட்டினாலும் முகத்தில் சோகக் களை தட்டுப்படும். தம் குறை உள் மனத்திலிருந்து சோகக் களையாக வெளிப்படுவதை அவரை உற்று நோக்குவாருக்குத் தெளிவாகும். சுக துக்கங்களை ஒன்றாகப் பாவிக்கும் பக்குவப் பட்ட மனத்தையுடைய மகான் அவர் சைவ சித்தாந்தப்படி இருவினையொப்பு என்பதைக் கடைப்பிடித்தவர் ஆகின்றார்.