பக்கம்:பல்சுவை விருந்து.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி ஒழிப்பு 量了9

வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய

மேவுகின்ற தருணம்.இது கூவுகின்றேன் உமையே

5 (முடி) புனித குலம் பெறுமாறு புகலல் -1 என்ற பாடலில் இக் கூவுதலைக் காணலாம்.

சாதி சமயங்களிலே வீதி பல வகுத்த சாத்திரக் குப்பைகள் எல்லாம் பாத்திரம் அன்று என்கின்றார்.

சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த

சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே

அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன் ஒதிஉணர்ந் தோர்புகழும் சமரசன் மார்க்கம்

உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப்பொருளாம் சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்

சுத்தசிவ நிறைவை உள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.

- 6(முடி) அநுபவமாலை 92 என்ற பாடலில் இதனைக் கண்டு மகிழலாம்.

இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பைகளை எல்லாம் எருவாக்கி குழி வெட்டி மண் மூடிப் போட்டு அருட்சோதி வீதியில் தம்மை ஆடச் செய்தான் ஆண்டவன் என்பதை,

இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை

இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு மருட்சாதி சமயங்கள் மதங்களைச் சிரம

வழக்கெல்லாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத் தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னிதி

சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும் அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே

அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவர் நீரே.

- 5 (முடி) சிவானந்தத்தழுந்தல் - 10 என்ற பாடலில் காட்டுகின்றார்.