பக்கம்:பல்சுவை விருந்து.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

3

வழிகாட்டும் வள்ளுவம்

சிந்தித்து தான் இருப்பார்கள். தாம் எழுதிய நூல்களில் சுட்டியு மிருப்பார்கள். இருந்தாலும், மனிதன் வாழப் பிறந்தவன், வையத்தில் வாழ்வாங்கு வாழ்வது எப்படி என்ற விஷயங்களை யெல்லாம் தொகுத்து உலகின் எப்பகுதியிலாவது ஒரு நூல் என்றேனும் வெளிவந்திருக்கிறதா என்று வினாவினால், 'இல்லை' என்ற விடையைத் தான் கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் தமிழ் நாட்டில் மட்டிலும் அவ்விதமான ஒரு நூலைத் தோற்றுவித்த பெருமை இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னதாகவே ஏற்பட்டு விட்டது. அந்நூல் தெய்வப் புலமை வாய்ந்த திருவள்ளுவரால் அருள்ப்பட்ட திருக்குறளாகும்; அதைத் தான் வாழ்க்கை நூல் என்று யான் குறிப்பிடுகிறேன். இத்திருக்குறளைப்பற்றிதான் ஒன்றிரண்டு கருத்துகளை உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்து வந்திருக்கிறேன்.

இத்திருக்குறிள்ை ஏதாவது ஒரு நூல் வகையில் சேர்த்து எண்ண முடியாது. அதில் இல்லாத பொருளே இல்லை என்று கூடச் சொல்லி விடலாம்; அதாவது வாழ்க்கைக்கு வேண்டிய அத்தனை அம்சங்களும் அதில் அமைந்திருக்கின்றன.

"எல்லாப் பொருளும் இதன்பால் உள; இதன்பால்

இல்லாத எப்பொருளும் இல்லையால்' என்று மதுரைத் தமிழ் நாகனார் என்ற சங்கப்புலவர் ஒருவரே குறிப்பிட்டிருப்பது ஈண்டு அறியற்பாலது. இந்நூல் அறத்தினை அறிய வேண்டுவார்க்கு ஒரு பேரற நூல்; அரசியலை ஆராய விரும்புவார்க்கு ஒரு அரசியல் நூல்; ஞானத்தை அடைய விரும்புவார்க்கு ஒரு ஞான நூல்: கவிச் சுவையை விரும்பு வார்க்கு ஒரு காவியக் கருவூலம்; காமச் சுவையை விரும்பு வார்க்கு ஒரு காம நூல்; பேரின்பம் விரும்புவார்க்கு ஒரு பேரின்ப நூல்; வாழ்க்கை நெறியறிய விரும்புவார்க்கு து வாழ்க்கை வழிகாட்டி நூல்; ஒருவர் எந்தக் கோணத்தில் அதை நோக்கின்ாலும் அவர் அடைய விரும்பும் அத்துணை

1. திருவள்ளுவமாலை - 29

ப.க - 3