பக்கம்:பல்சுவை விருந்து.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலாசிரியர் பற்றி S.K. இராமராசன்'

மாறுபா டில்லா இலக்கியம் வளர

மாண்புறும் அறிவியல் வளர

நூறுநூல் தந்தார்; இன்னும்பன் நூல்கள்

துட்பமாய் வரைந்திட உள்ளார்;

கூறுபா டுற்ற அகத்தெழு நினைவுக்

குமிழிகள் உணர்வினில் சமைத்தார்;

தேறுசீர் சான்ற அப்பெரு நூற்குள்

- சிந்தனைச் செல்வங்கள் உளவால்!

சிரிக்கச் சிரிக்கப் பகருப மாணத்தால்

சிந்த னைக்குமெட் டாத பொருளினை விரித்துக் காட்டித் தெளிவிக்க வல்லவர்

வெகுளி யோடு பகையினைச் சாடுங்கால் எரிக்கும் காண்டவத் தீயொப்பர் என்னினும்,

இதயம் மேவும் அமைதியைக் காப்பவர்; அரிக்கும் வஞ்சகம் சற்றும் புகுந்திடா

ஆண்மை மிக்கவர்; பண்புறு வானவர்:

1. திரு S.K. இராமராசன் (கம்பராமன்) கம்பன் நிலையம்,

12 சுப்பிரமணியபுரம் திருவரங்கம்,திருச்சிராப்பள்ளி - 620 006