பக்கம்:பல்சுவை விருந்து.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தரின் பாடல்களில் படிமங்கள் 45

பொன்முடி குண்டான் கவிழும்போது அதில் சிறிதும் நீர் இருப்ப தில்லை. அதுபோல் பண்டாரம் சிறிதும் அஞ்சாமல் பொன்முடியின் காதல் மறையை அம்பலத்தில் அவிழ்த்து விடுகின்றான். நீர் கொட்டும் காட்சியில் இயக்கப்புலப் படிமத்தைக் கண்டு மகிழலாம். இந்தப் படிமத்திற்கு ஒரு முத்தாய்ப்பு வைத்தது போல், எல்லாம் அசையச் செய்தாய் - உயிர்கள் எதிலும் அசைவைச் சேர்த்தாய் சொல்லால் இசையால் இன்பம்

துய்க்கச் செய்தாய்! அடடா! கல்லாமயில், வான்கோழி - புறவுகள்

காட்டும் சுவைசேர் அசைவால் அல்லல் விலக்கும் ஆடற் கலை தான்

அமையச் செய்தாய் வாழி' என்ற பாடலில் காட்டுகின்றார் கவிஞர்.

கலவை நிலைப் படிமங்கள்: சில பாடல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட படிமங்கள் அமைந்து பொலிவூட்டி முருகுணர்ச்சியை மிகுவிக்கின்றன.

புறப்பட்ட மங்கைதன், பூங்கொடி என்பவள் நிறப்பட் டாடை நெகிழ்ந்தது காற்றில். பாதச் சிலம்பு பாடிற்று நிலாமுகம் சீதளம் சிந்திற்றாம். செவ்விதழ் பின்னிற்றாம்" பூங்கொடியின் வருகையைச் சித்திரிக்கும் இவ்வடிகளில் நிறப் பட்டாடையிலும் நிலா முகத்திலும் செவ்விதழ் மின்னுவதிலும், கட்புலப் படிமங்களும் அதன் நெகிழ்ச்சியில் இயக்கப் புலப் படிமமும், சிலம்பு பாடுவதில் செவிப் புலப் படிமமும், முகம் சீதளம் சிந்துவதில் தொடு புலப் படிமமும் அமைந்து பூங்கொடி யின் அழகிற்குப் பொலிவூட்டுவதைக் கண்டு மகிழலாம்.

41. பா.தா.க. - 4. இயற்கைச் செல்வம். 42. எதிர்பாரா முத்தம். ப.க - 5