பக்கம்:பல்சுவை விருந்து.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பல்சுவை விருந்து

இவண் குறிப்பிட்ட விபாவம் இருவகைப்படும். அவை 'ஆலம்பன விபாவம்' என்றும் உத்தீபன விபாவம்' என்றும் பெயர் களைப் பெறும். ஒருவரின் காதல் முதலிய உள்ள நிகழ்ச்சிக்கு எப்பொருளின் சார்பு காரணமோ அப்பொருள் அதற்கு ஆலம்பனம் எனப்படும். எவ்வாறெனின், தலைவனின் உள்ளத்துள்ள காதல னுக்குத் தலைவியும், தலைவியின் உள்ளத் துள்ள காதலுக்குத் தலைவனும் ஆலம்பன விபாவம் ஆகும். அங்ங்னமே தலைவனின் உள்ளத்துள்ள சோகத்திற்குத் தலைவியின் இறப்பும், தலைவியின் உள்ளத்துள்ள சோகத்திற்குத் தலைவனின் மரணமும் ஆலம்பன விபாவம் ஆகும் என அறிதல் வேண்டும். இங்ங்ணம் தோன்றிய காதல் முதலியவற்றை வளர்த்து விளங்கச் செய்வது உத்தீபன விபாவம் எனப்படும். அவர்களுடைய உருவின் சிறப்பு, குண நலன், செயல், அணிகலன் முதலியனவும், தென்றல், நிலா, கட லொலி முதலியனவும், உத்தீபன விபாவம் ஆகும். தொல் காப்பியர் குறிப்பிடும் செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு முதலியன இவையே என்பது ஈண்டு அறியப்படும்."

இனி காரியமாகிய அநுபாவமும் இரண்டு வகைப்படும். ஒன்று அகத்தது; மற்றொன்று புறத்தது. அந்தக் கரணத்தைச் சார்ந்தனவாகிய ஸ்தம்பம், பிரளயம் முதலியவை முதற் பிரிவிற்குரியவை அவை சாத்விக பாவம் எனப்படும். கிடைக்

4. ஆலம்பன விபாவம், ஆலம்பனம் பற்றுக்கோடு, விபாவம் - துண்டல்: அதாவது பற்றுக்கோடாய தூண்டல் 5. உத்தீபன விபாவம், உத்தீபனம் - கிளர்த்தல் விபாவம் - துண்டல். அதாவது கிளர்த்தும் துண்டல். 6. மெய்ப். நூற் 3 முதல் 11 வரை நான்காகப் பிரித்துக் கூறியவை. ஆசிரியர் தொல்காப்பியனார் கூறும் முதற் பொருளும் கருப் பொருளும் உத்தீபன விபாவம் ஆகும். இவை வரும் சங்கப் பாடல்களை நோக்கி இதனை அறியலாம். 7. இது எட்டு வகைப்படும் () ஸ்தம்பம் செயலற்று நிற்றல்; (ii) பிரளயம் - மூர்ச்சித்தல்; (iii) ரோமாஞ்சம் - மயிர்க்கூச்செறிதல் (யுD) சுவேதம் வியர்த்தல் (w) வைவர்ணயம் - நிறமாற்றம் (vi) வேபது உடல் நடுக்கம் (wi) அஸ்ரு கண்ணீர் உகுத்தல் (vii) வைஸ்வர்யம் - குரல் வேறுபாடு (அடிக்குறிப்பு - 1 உடன் ஒப்பிடுக).