பக்கம்:பல்சுவை விருந்து.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் நகைச்சுவை 了3

சுவைப் பாகுபாடு: சுவைகளின் பாகுபாட்டைப் பற்றிச் சிறிது விளக்கம் இன்றியமையாததாகின்றது. நம்முடைய பேச்சும் எழுத்தும் உணர்ச்சியுடன் நின்று விடுகின்றன. ஆகவே, ரசத்தை (சுவையைப்) பாகுபாடு செய்வது இயலாததாகின்றது. சுவை நிறைந்த மாம்பழத்தைத் தின்ற ஒருவன் அதன் சுவையைப் பற்றிப் பலவாறு வருணிக்கலாம். ஆனால் அதன் சுவையை அவன் பிறரால் உணரும்படி செய்தல் இயலாது. பிறரும் அம் மாம்பழத்தைத் தின்று சுவைத்தாலன்றி அதன் சுவையை உணர முடியாது. ரஸ்மும் அந்த வகையைச் சார்ந்த தாகவே கொள்ள வேண்டும். ரஸ்ம் ஒருவருடைய அநுபவம். அதைப் பிறருக்கு எடுத்துக் கூற எவராலும் இயலாது. எனவே, சுவை இலக்கண நூலார் ரஸ் நிலையை வைத்துக் கொண்டு அதனை வகுத்துக் காட்ட முற்படாமல், ரஸ்த்திற்கு முன்னிலை யாகின்ற உணர்ச்சிகளை வைத்து ரஸங்களையும் பாகுபாடு செய்தனர். தம் மனத்தில் தோன்றக் கூடிய எண்ணற்ற உணர்ச்சி களை ஒன்பதாகப் பிரித்துள்ளனர்; அனைத்தும் இந்த ஒன்பது பிரிவுக்குள்ளேயே அடங்கும் என்பது அவர்கள் கருத்தாகும். இந்த ஒன்பதிற்கும் புறம்பான மனநிலையே இல்லை. என்பது அவர்களுடைய துணிபு. உலகப் பொருள்கள் எந்தவிதமான மனோபாவங்களை எழுப்பினாலும் அவற்றை இந்த ஒன்ப துக்குள் ஒன்றாகவே பாகுபாடு செய்து விடலாம். இந்த ஒன்பது சுவைகட்கும் அவர்கள் தனித்தனியே பெயர்களிட்டுள்ளனர். co;68)(6).J.

வடமொழி தமிழ் 1. சிருங்காரம் - %.© jöᏡᏜ 2. கருணம் - அழுகை 3. வீரம் - பெருமிதம் 4. ரெளத்திரம் - வெகுளி

5. ஹாஸ்யம் - நகை