பக்கம்:பல்சுவை விருந்து.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் நகைச்சுவை 75

இந்நிலை பெற்ற பாவமே ரஸ்மாகும். உணர்ச்சிப் பெருக் கால் உள்ளம் பூரித்து மனம் அசைவற்று நிற்கும்போது அதில் ஆன்மா தெளிவாகப் பிரகாசிக்கின்றது. உடனே மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகின்றது. உள்ளம் உணர்ச்சி ததும்பிப் பூரித்து நிற்கும் நிலையில் இன்பம் பிறக்கும் என்பதற்கு வால்மீகி முனிவரின் நிலை சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும். அப்பொழுது தான் இராமாயணத்தின் மூலசுலோகம் பிறந்ததாக வரலாறு. அந்த வரலாறு இது மிதுனங்களான கிரவுஞ்சப் பறவைகளுள் பெண் பறவையின் பிரிவு தனக்கு உண்டாகுமோ என்று எப்பொழுதும் அஞ்சும் தன்மையுடைய ஆண் பறவையை வேடன் அடித்துக் கீழே தள்ளிவிட்டான். அது குருதியில் தோய்ந்து மண்ணில் பரிதவிக்கும் நிலை கல் நெஞ்சத்தையும் உருக்குந் தன்மையது.

இந்நிலையைப் பெண் பறவை கண்ணுற்றது. அச்சிறு உள்ளம் அத்துயரத்தை எவ்வாறு தாங்கும்? அது தன் துணைவ னின் பிரிவினைத் தாங்க முடியாமல் கதறியது. துடித்துத் துடித்துப் புலம்பும் காட்சியை முனிவர் கண்டார். துக்கத்தால் மனம் நிரம்பி அசைவற்று நின்றது. சோகம் அவரை ஆட் கொண்டு விட்டது. அந்நிலையில் அவரது ஆன்மா பளிச்சென்று தெரிந்தது. உடனே துன்ப வேகம் எல்லாம் இன்பப் பெருக்காய் மாறி விட்டது. அது கருண ரஸ்மாய்ப் பரிணமித்தது. அந் நிலையில் முனிவர் தம்மை மறந்து நின்றார். பிறகு விழித்துக் கொண்ட பொழுது, மனத்துண்டான சோகம் ஒரு சுலோகமாக, அளவற்ற இன்பத்தின் மணம் கமழ, வெளிக் கிளம்பி வந்தது. அதுவே கவிதா தேவியின் அருளோதயம். சுலோகத்தின் பொருள் இது: "வேடனே, மிதுனங்களான கிரவுஞ்சப் பறவை களுள் காம மோகம் கொண்ட ஆணினைக் கொன்றமையால் பல நாள் இவ்வுலகில் நீ நிலைத்திராய்' என்பது. இங்கு கடித்துக் கொல்லப் பெற்ற ஆண் பறவை ஆலம்பன விபாவம். பெண் பறவையின் கதறுகை உத்தீபன விபாவம். சோகம் ஸ்தாயி பாவம். உணரப்படும் சுவை கருணம் ஆகும். முனிவர்