பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

பல்லவப் பேரரசர்



பல்லவர்-கதம்பர் போர்

கதம்பர் தமக்குத் தெற்கே இருந்த கங்க நாட்டைக் கைப்பற்றப் பலமுறை முயன்றனர். கங்கர், பல்லவர் துணையை நாடினர். பல்லவ அரசர் படைகளுடன் சென்று கங்கருடன் கலந்து கதம்பரை வென்றனர். இங்ஙனம் பல்லவர்க்கும் கதம்பர்க்கும் நடந்த போர்கள் பலவாகும்.

சாளுக்கியர்

ஏறத்தாழக் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கதம்ப நாட்டிற்கு வடக்கே சாளுக்கியர் என்னும் மரபினர் தோன்றினர். அவருள் முதல் அரசன் விஜயாதித்தன் என்பவன். அவன் தலைநகரம் வாதாபி என்பது. விஜயாதித்தன், அவன் மகனான ஜயசிம்மன், அவன் மகனான இரணதீரன், அவன் மைந்தனான முதலாம் புலிகேசி ஆகியோர் அனைவரும் இவ்விடைக்காலப் பல்லவருடன் போரிட்டவண்ணம் இருந்தனர்.

குழப்பமான காலம்

இவ்வாறு பல்லவர் தெற்கே சோழர், களப்பிரரிடத்தும் வடக்கே ஆனந்தர், இக்ஷ்வாகரிடத்தும்: வடமேற்கில் கதம்பர், சாளுக்கியரிடத்தும் ஓயாது போரிட வேண்டியவர் ஆயினர்; அதனால், பல சமயங்களில் தொண்டைநாட்டை இழந்தனர்; பெருந்துன்பப்பட்டனர்; போர்முனைகளிலேயே தம் வாழ்நாட்களைக் கழித்தனர். இந்நிலைமையில் அவர்கள் விட்ட பட்டயங்களைக் கொண்டு அவர்களது அரசமுறை, அரசியல் முதலிய செய்திகளைக் கூறக்கூடவில்லை.