பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

பல்லவப் பேரரசர்



தக்கவை. வராக அவதாரம், வாமன அவதாரம், கஜலக்ஷ்மி, துர்க்கை இவர்தம் உருவச்சிலைகள் அழகிய வேலைப்பாடு கொண்டவை.

சாளுக்கிய வேலைப்பாடு

இக்கோவில் அமைப்பு, தூண்கள் அமைப்பு, மேற்சொன்ன சிற்பங்களின் வேலைப்பாடு இவை அனைத்தும் சாளுக்கியருடைய கோவில்களை நன்கு பார்வையிட்ட பிறகு உண்டானவை. நரசிம்மவர்மன் வாதாபியைப் பதின்மூன்று வருடகாலம் கைக்கொண்டிருந்தான். அல்லவா? அக்காலத்தில் சாளுக்கிய நாட்டிலிருந்த குடைவரைக் கோவில்களையும் சிற்ப வேலைப்பாட்டையும் கண்டு மகிழ்ந்து, அந்த அழகிய அமைப்பில் மேற்சொன்னவற்றை அமைத்திருத்தல் வேண்டும். இவ்வேலைக்குச் சாளுக்கிய நாட்டுச் சிற்பிகளும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.


II. ஒற்றைக்கல் கோவில்கள்