பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

85



சேரர்

சங்க காலத்திற்குப் பிறகு இவர்கள் செல்வாக்கும் உரிமையும் மறைந்தன. இவர்கள். பாண்டியர்க்கு அடங்கிப் பெரும்பாலும் சிற்றரசர் நிலையில் இருந்து வந்தனர். பாண்டியர்க்கும் சேரர்க்கும் ஒயாது போர்கள் நடந்த வண்ணம் இருந்தன.

சோழர்

நரசிம்மவர்மன் காலத்துச் சோழன் மங்கையர்க் கரசியாரின் தந்தை அல்லது உடன்பிறந்தான் ஆவன். அவனது தலைநகரம் உறையூர். அவன் பாண்டியர்க்கு உடந்தையாக இருந்தவன்; பாண்டியன், பல்லவனை எதிர்த்த பொழுதெல்லாம். இவன் பாண்டியனுடன் சேர்ந்திருந்தான்.

பாண்டியர்

இக்காலத்துப் பாண்டியன் மாறவர்மன் அரிகேசரி என்ற நின்றசீர் நெடுமாறன் என்பவன். இவன் கி.பி. 640-இல் பட்டம் பெற்றவன் சுமார் 40 ஆண்டுகள் அரசாண்டவன். இவன் மங்கையர்க்கரசியார்க்குக் கணவன். இவன் பல்லவனைச் சங்கரமங்கை என்னும் இடத்தில் வென்றதாகப் பாண்டியர் பட்டயம் குறிக்கின்றது. இவன் மகன் கோச்சடையன் ரணதீரன் என்பவன்; மங்கையர்க்கரசியார் மகன்; அதனால் தன்னை ‘சோழ-பாண்டியன்’ என்று. கூறிக்கொண்டவன். நெடுமாறன் சைவ நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவன்.