பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகேந்திரவர்மன்

93



அனைத்தும் மலைச் சரிவுகளில் குடைந்து தஅமைத்தவை. இவை மலை உச்சியினும் இரா, அடியிலும் இரா, இடையிற்றான் இருக்கும். இத்தகைய இடத்தில் ஒரு கோவிலைக் குடையும்பொழுது, ஆங்குத் துண்களையும் சுவர்களையும் மூர்த்தங்களையும் செய்வதற்காக இடம்விட்டு, மிகுந்த இடமே குடையப்பட்டிருக்கும். தூண் கீழும் மேலும் சதுரமானது; நடுவில் மூலை செதுக்கப்பட்டது.தூணின் முழு உயரம் ஏழு முழம்; மேற்சதுரமும் கீழ்ச்சதுரமும் இரண்டிரண்டு முழம் உயரம் இருக்கும். சதுரத்தில் தாமரை மலர் செதுக்கப்பட்டிருக்கும். தூண்களின் புறங்களில் மகேந்திரன் பட்டப்பெயர்கள் பல செதுக்கப் பட்டிருக்கும். துணின் போதிகை சதுரக் கற்பலகையால் இயன்றது. கோவிற் சுவர்களின் மீது சித்திர வேலை காணப்படும். கோவில் நடுவில் இறையகம் (கர்ப்பக் கிருகம்) இருக்கும். அதன் இரு புறங்களிலும் வாயிற் காவலர் (துவாரபாலகர்) உருவங்கள் அமைந்திருக்கும். அக்காவலர் பாகை உடையவர். அவர்தம் வலக்கை இடக்கை மீது இருக்கும். இடக்கைஒருதடியைப் பிடித்திருக்கும். அக் காவலர் தடிமீது முன்புறம் சிறிது சாய்ந்த படி பார்பவரை அடிக்க முயல்பவரைப்போலக் காணப்படுவர். கோவிற்கவர்கள் மீது புராணக் கதைகளைக் குறிக்கும் அழகிய சிலைகள் செதுக்கப் பட்டிருக்கும். கோவிற் சுவராகிய பாறையிலேயே (பெருமாள் கோவிலாயின்) விஷ்ணு வடிவம் செதுக்கப்பட்டிருக்கும். இக் கோவில்கள் பலவற்றில் மகேந்திரன் காலத்துக் கல்வெட்டுகள் இருக்கும். அவை வடமொழியிலும் தென்மொழியிலும் பொறிக்கப்பட்டு இருக்கும்.

(1) பல்லாவரம் குகைக்கோயில்

சென்னைக்கடுத்த பல்லாவரம் என்னும் புகைவண்டி நிலையத்துக்கு எதிரே பல குன்றுகள் லாடம் போன்ற அமைப்பில் இருக்கின்றன. அவற்றின் இடையே பல சிற்றுர்கள் இருக்கின்றன. அவற்றுட்பெரியது ‘ஜமீன் பல்லாவரம்’ என்பது. அந்த ஊரில் உள்ள குன்றில் இன்று முஸ்லீம் தொழுகை இடமாக அமைந்துள்ள மண்டபமே மகேந்திரவர்மன் அமைத்த குகைக்கோவில் ஆகும். இது