பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

பல்லவர் வரலாறு



மலைச் சரிவில் குடையப்பட்டுள்ளது. ஏறக்குறைய 24 அடி நீளமும் 12 அடி அகலமும் உள்ளது; 5 கற்றுண்களை உடையது; முன் மண்டபத்திற்குள் 5 சிறிய உள் அறைகள் உள்ளன.அவ்வறைகளில் சிலைகள் வைக்க மேடைகள் இருக்கின்றன. அங்கு ஐந்து தெய்வங்களின் சிலைகள் இருந்தனவாதல் வேண்டும். இப்பொழுது நடு அறையுள் முஸ்லிம் ‘பீலி’ வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இரு பக்க அறைகள் வெறுமையாக இருக்கின்றன. கடைசிப் பக்க அறைகள் இரண்டும் கதவு அமைந்து பூட்டப்பட்டுள்ளன. குகைக்கோயில் முழுவதும் சுண்ணாம்பு அடிக்கப்பட்டுள்ளது. மேல் விட்டம் முழுவதும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆயின், இன்று அவை படிக்க இயலாத நிலையில் சுண்ணாம்பு படிந்துள்ளன. கற்றுண்கள் மேலே குறிக்கப்பட்ட அளவுள்ளன. இக் குகைக் கோயிலில் உள்ள ஐந்து உள் அறைகளை மகேந்திரன் காலத்துச் சிலைகள் அங்கு இல்லாத பிற்காலத்திற் கண்ட பல்லவபுர மக்கள், உண்மை அறியாது இக் கோவிற்குப் ‘பஞ்ச பாண்டவர் கோவில்’ என்று பெயரிட்டனர். அப்பெயரே இன்றளவும் வழங்கி வருகின்றது. கல்வெட்டுகளில் மகேந்திரன் விருதுப் பெயர்கள் வடமொழயிலும் தெலுங்கிலும் உள்ளன.

(2) பல்லவபுரம்

இக் குகைக் கோவிலுக்கு எதிரே சுற்றிலும் காணப்படும் மலைகளுக்கு இடையில் பழைய பல்லவபுரம் இருந்திருக்க வேண்டும். தெருக்களின் பழையபெயர்களும், சிதைந்த பல கோவில்களின் காட்சியும், பல தெருக்கள் ஆங்காங்கே சிதைந்து இருந்தாலும், தோண்டும் இடங்களில் எல்லாம் உறை கிணறுகளும் மட்டாண்டச் சிதைவுகளும் பழங்காலத் தாழிகளும் இன்ன பிறவும் கிடைத்ததும், மலைகட்கு இடையே அமைந்த இப் பெருவெளி மகேந்திரன் காலத்தில் இயற்கை அரண் கொண்டமுதல்தர நகரமாக இருந்திருத்தல் வேண்டும் - பல்லவனால் அமைந்தமையின் பல்லவபுரம் எனப் பெயர் பெற்றதாதல் வேண்டும் என்னும் செய்திகளைநன்கு உணர்த்தும்.'பல்லவபுரம் என்னும் பெயர் இன்று