பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆருகத மதத்தை ‘இந்து’ மதத்தில் சேர்க்க முயன்றது

199



நந்திவர்மனைக் ‘காவிரி நாடன்’ என்றே குறித்துள்ளன; அவை, ‘காவிரி வளநாடா’ (17), ‘காவிரி வளநாடன்’ (28), ‘காவிரி நன்னாடா’ (57), ‘பொன்னி நன்னாட்டு மன்னன்’ (56), ‘காவிரி வளநாடு ஆள்வோனே’ (86) என்பன. தஞ்சைக் கோட்டத்தில் உள்ள திருநெய்த்தானத்தில் இவனது கல்வெட்டு இருக்கின்றது. ஆதலின், இச் சான்றுகளைக் கொண்டு காணின், இவனது ஆட்சி தஞ்சைக் கோட்டத்தில் நிலைத்திருத்தமை நன்கு அறியலாம்.

பேரரசன்

இதுகாறும் கூறிய செய்திகளால், மூன்றாம் நந்திவர்மன் வடக்கிலும் தெற்கிலும் அச்சமின்றி நாட்டையாண்டபெருவீரனாகப் பிற்காலத்தைக் கழித்தான் என்பதை உணரலாம். இவன் பேரரசன் என்பதை நந்திக்கலம்பகம் பலபடக் குறித்துள்ளது. அவை “மூவேந்தரும் வடபுலத்தரசரும் திறைதந்தனர்; (செ.27); “புகாராகிய காவிரிப் பூம்பட்டனம் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது’ (செ44):இவனிட்டவழக்கன்றோ வழக்கிந்தவையத்தார்க்கே (53): “அறம் பெருகும் தனிச்செங்கோல் மாயன்” (60): “பொதுவின்றி ஆண்ட பொலம்பூண் பல்லவன்” (61): “இவ் வையம் எல்லாம் படக்குடை ஏந்திய பல்லவன்” (65): “தண் செங்கோல் நந்திதனிக் குடையுடையவன்” (72): “தமிழ்த் தென்றல் புகுந்துலவும் தண் சோணாடன்” (74) என்பன.

நல்லியல்புகள்

‘அறம் பெருகும் தனிச் செங்கோல் மாயன்’ (செ.60) தண் செங்கோல் நீந்தி (72) பகை இன்றிப் பார்காக்கும் பல்லவர் கோன் (70) முதலிய நந்திக்கலம்பகத் தொடர்களால், மூன்றாம் நந்திவர்மன் செங்கோல் அரசன்: அறம் வளர அரசாண்டபெருமகன்; குடிகளைக் காக்கும் தொழில் பூண்டவன். இவனது ஆட்சி தண்மையாக இருந்தது. என்பன நன்குணரலாம். இதனையே ‘கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்’ என்று சுந்தரரும், “நாடு அறநெறியில் வைக நன்னெறி வளர்த்தான்” என்று சேக்கிழாரும்