பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

பல்லவர் வரலாறு



பல்லவர்-பாண்டியர் போர் 1

நிருபதுங்கவர்மன் காலத்தில் பாண்யராக இருவர் இருந்தனர். முதல் அரசன் சென்ற பகுதியிற் கூறப்பட்ட சீமாறன் சீவல்லபன் (கி.பி.830 - 862) அவனுக்குப் பின் அவன் மகனான இரண்டாம் வரகுண பாண்டியன் கி.பி. 862 முதல் 880 வரை அரசாண்டான். எனவே, நிருபதுங்கள் காலத்தின் முற்பகுதியில் சீமாறனும், பிற்பகுதியில் வரகுணனும் பாண்டி மன்னராக இருந்தனர் என்பது நினைவுகூர்தற்குரியது. சீமாறன் தெள்ளாற்றுப்போரில் தோல்வியுற்ற பிறகு பல ஆண்டுகள் கழித்துத்தான் குட மூக்கில் (கும்பகோணத்தில்) பல்லவரையும் அவருக்குத் துணையாக வந்த வரையும் வென்றதாகக் கூறியுள்ளார்கள். நிருபதுங்க பல்லவன் பாகூர்ப் பட்டயத்தில் ‘பாண்டியனிடம் முன் தோல்வியுற்ற பல்லவர் படை, அரசன் அருளால் (நிருபதுங்கன் படை செலுத்தியதால்) அவனையும் பிறரையும் அரிசில் ஆற்றங்கரையில் முறியடித்தது’ என்பது காணப்படுகிறது. இவ் விரண்டையும் ஒப்புநோக்கி ஆராயின். (1) பாண்டியன் மூன்றாம் நந்திவர்மன் இறுதிக் காலத்தில் அல்லது நிருபதுங்கன் ஆட்சித் தொடக்கத்தில் பல்லவரைக் குடமுக்கில் வென்று இருத்தல் வேண்டும். (2) பிறகு நிருபதுங்கன் பெரும் படையுடன் சென்று அரிசில் ஆற்றங்கரையில் சீமாறனை வென்றிருத்தல் மீண்டும் என்பன நன்கு விளங்கும்.

குடமூக்குப் போர்

மூன்றாம் நந்திவர்மன் பாண்டியநாட்டு எல்லைவரை சென்றதாக முன்பகுதியிற் கூறினோம் அல்லவா? பல ஆண்டுகட்குப்பின் அந்த இழிவை நீக்க, சீமாறன் பெரும் படை திரட்டிப் பல்லவ நாட்டின்மீது படையெடுத்திருத்தல் வேண்டும். அப்போது நந்திவர்மன் தெள்ளாற்றில் தோற்ற பாண்டியனை எளியனாக எண்ணி, தான் போகாமல், பாண்டியனை எதிர்க்கும்படி தன் சேனைத்தலை வனையே படையுடன் அனுப்பி இருக்கலாம். அப்பொழுது நடந்த குடமூக்குப் போரில் பல்லவர் படைதோற்று மீண்டிருக்கலாம். இந்த