பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


 இதை மறுக்கக் கூடாது" என்று அம்மாச்சிட்டு கெஞ்சிக் கேட்டுக் கொண்டது.

தலைமை ஆசிரியைக்கு, அந்தச் சிட்டு மீது இரக்கம் ஏற்பட்டது. அதனால், அந்தச் சிட்டு, கேட்டுக் கொண்டபடி அதன் குஞ்சுகளைத் தன் பள்ளிக் கூடத்தில் சேர்த்துக் கொள்ள ஒப்புக் கொண்டாள்.


பள்ளிக்கூடச் சம்பளமும், நன்கொடையும் கேட்கவில்லை. “நாளைக் காலை ஒன்பது மணிக்கு உன் குஞ்சுகள் இரண்டயும் கூட்டிக் கொண்டுவா. மழலையர் வகுப்பில் சேர்த்துக் கொள்ளச் சொல்கிறேன். ஒழுங்காகப் பாடம் படித்தால் தொடர்ந்து படிக்கலாம். இல்லாவிட்டால், பள்ளியிலிருந்து நீக்கி விடுவேன். எச்சரிக்கை” என்று கடுமையாகச் சொல்லி அனுப்பினாள்.

அம்மாச்சிட்டுக்கு, ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனந்தமாகச் சிறகடித்துப் பறந்து கொண்டே அரசமரத்தை நோக்கிச் சென்றது.