இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16
தலைமை ஆசிரியை வகுப்பறைக்கு வந்து அந்த வகுப்பு ஆசிரியையைக் கோபித்துக் கொண்டாள்.
அந்த வகுப்பு ஆசிரியை, “குழந்தைகளின் மதிப்பெண் குறைந்ததற்குக் காரணம், இந்தச் சிட்டுக் குருவிகள் தான்!” என்று கூறினாள்.
அதனால், தலைமை ஆசிரியை, அம்மாச் சிட்டைக் கூப்பிட்டுக் கண்டித்தாள். "அடுத்த மாதமும் இதே மாதிரி மதிப்பெண் குறைந்தால், இரண்டு சிட்டுக் குஞ்சுகளையும் பள்ளிக் கூடத்தை விட்டு நிறுத்தி விடுவேன்" என்று திட்டமாகச் சொல்லி விட்டாள்.
அன்று மாலை, பள்ளி விட்டுத் திரும்பிய சிட்டுக் குஞ்சுகளுக்கு நல்ல திட்டுக் கிடைத் தது. அம்மாச் சிட்டு மிகச் சினத்தோடு பேசியது. "இனிமேல் விளையாட்டைக் குறைத்துக் கொள்கிறோம்” என்று அந்தச் சிட்டுக் குஞ்சுகள் உறுதியளித்தன.
ஒருவாரம் கழித்து ஒரு நாள் தலைமையாசிரியை எங்கோ பேருந்தில் போய்வந்தாள். பேருந்தை விட்டுக் கீழே இறங்கி நடந்து.