பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30


பூனை குடத்தை உருட்டிவிட்டது. குருவி வெளியில் வரவில்லை.

நெடுநேரம் உருட்டி உருட்டிப் பார்த்துவிட்டு அலுத்துப் போய்ப் பூனை சென்று விட்டது.

குடத்தின் வாய்ப்பகுதிக்கு வந்து வெளியே எட்டிப் பார்த்தது. நான்கு புறமும் தலையைத் திருப்பிப் பார்த்தது. தொலைதூரம் வரை கூர்ந்து பார்த்தது. பூனை அந்தத் தோட்டத்தை விட்டே போய்விட்டது என்று உறுதிப் படுத்திக் கொண்ட பிறகு வெளியே வந்தது.

படுபாவிக் கிழவன் பறக்க முடியாமல் செய்து விட்டானே என்று திட்டிக் கொண்டே தத்தித் தத்தி நடந்து சென்றது. யாரும் தன்னைத் தொடரவில்லை என்று ஒவ்வொரு தடவையும் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டு இராயபுரம் கடற்கரைக்கு வந்தது.

கடற்கரையோரமாக ஒரு மாந்தோப்பு இருக்கிறது. அதற்குள் நுழைந்துவிட்டால், தன் இனத்தோடு சேர்ந்து விடலாம் என்ற நினைப்போடு அது சென்றது.