பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31



எப்படியோ மாந்தோப்புக்குள் நுழைந்து விட்டது. அங்கே அதன் நண்பர்களான பல சிட்டுக்குருவிகள் பறந்துவந்து அதை வரவேற்றன.

“கண்ணா, இவ்வளவு நாள் எங்கே போயிருந்தாய்?” என்று அவை கேட்டன.

தன் வரலாற்றை அது கூறியது:

எல்லாக் குருவிகளும் அதற்காக இரக்கப்பட்டன.

அது பறக்க முடியாததால், அதற்குத் தரையை ஒட்டினாற்போல் இருந்த ஒரு செடியின் கிளையில் கூடுகட்டிக் கொடுத்தன.

செடியின் வாதுகளைப் பற்றிக் கொண்டே அது மெல்ல மேலேறிக் கூட்டுக்குட் சென்று விடும். இரவெல்லாம் கூட்டில் அமைதியாகத் தூங்கும். பகலெல்லாம் தோப்பிற்குள் அங்கும் இங்கும் நடந்து சுற்றும். கீழே கிடக்கும் ஏதாவது உணவுப் பொருள்களைக் கொத்தித் தின்னும் மற்ற குருவிகளோடு ஊர்க் கதைகளைப் பேசிக் கொண்டிருக்கும். அதன் பொழுது இன்பமாகக் கழிந்தது.