பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39


சிரித்த முகத்தோடு அன்பு வடிவமாக வந்து கொண்டிருந்த அந்தப்பெண்மணியைக் கண்ட சிட்டுக் குருவிகள் அவள் எதிரில் பறந்து வந்தன. அவள் தன் இரு கைகளையும் நீட்டினாள். சிட்டுக் குருவிகள் இரண்டும் அவளுடைய இரண்டு உள்ளங்கைகளிலும் போய் உட்கார்ந்தன.



இரண்டு சிட்டுக் குருவிகளுக்கும் அந்தப் பெண்மணி அன்பு முத்தம் கொடுத்தாள்.

"குழந்தைகளே உங்களுக்கு என்ன் வேண்டும்?” என்று கேட்டாள் அந்தப் பெண் மணி.