இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
53
செய்தார். எல்லாம் வளர்ந்து ஓர் அழகான பூஞ்சோலையாக மாறிய பின், தன் மகளை அதாவது இளவரசியை அங்கே அழைத்துச் செல்லும் முன் பூஞ்சோலையைப் பார்த்து வரப் புறப்பட்டார் மன்னர்.
அவருடைய அமைச்சர்கள் நான்கு பேரும், மெய்காப்பாளரும் உடன் சென்றனர்.
அந்தச் சோலை மிக அழகாக இருந்தது.
சோலையருகில் செல்லும்போதே பூக்களின் மணம் மூக்கைக் துளைத்தது.
மன்னர் சோலைக்குள்ளே நடந்து சென்றார்.
கக்கக்கக்கக்
குக்குக்குக்குக்
கக்குக்குக்கக்
குக்கக்கக்குக்
என்று சோலை முழுவதும் சிட்டுக் குருவிகள் ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன.
‘இது என்ன ஓசை?’ என்று கேட்டார் மன்னர் சற்றுச் சினத்துடனேயே!