பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జ్సీ 藝疆,破腳研砸亞@磁}。。。。。。。。。。。。。。。 曲 % 哗 ● 姆 砂 够 码》纷 豪 始 歌 149 இராமன் மீது எறிந்தாள், அது கடுகி விடுவது கண்டும் இராமன் வில்லை எடுக்கவில்லை. விசுவாமித்திரன், அவனைப் பார்த்து தீமை புரிபவர், பெண், ஆண் என்ற வேறுபாடில்லாமல் கொல்லப்படவேண்டும் என்று கூறி வில்லையெடுத்து நானேற்றக் கூறினான். இராமன் வில்லைத் தரையில் ஊன்றித் தயங்கி நின்றவன் அம்பை நாணில் ஏற்றினான். தரையில் வில் கீறிய இடம் வில்லுக்கீறி என்ற பெயர் பெற்றது." 8. திருப்புல்லாணி இராமன் அணைகட்டிய கதையோடு பல ஊர்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. திருப்புல்லாணி என்று அழைக்கப்படும் ஊர் திருப்புல்லணை என்றும், அது இராமன் புல்லினால் கட்டிய அணை என்றும் ஒரு புனைகதை அவ்வூரில் வழங்கி வருகிறது." 9. இராமேஸ்வரம் இராமேஸ்வரம் என்ற ஊரில் உள்ள லிங்க வடிவமான சிவபெருமான், இராமன் வெற்றி பெற்றுத் திரும்பும் பொழுது பூசித்து வழிபட்ட லிங்கமென்ற ஒரு புனைகதை வழக்கில் உள்ளது." இராமாயணக் கதாபாத்திரங்களோடு தொடர்புடைய இடங்கள் மேற்குறிப்பிட்ட ஒன்பது புனைகதைகளில் இராமனோடு தொடர்புடையவை மூன்று. இவற்றுள் ஒன்றுஇராமனோடும் அனுமனோடும் தொடர்புடையது. இது மூன்றாவது கதை. இக்கதையில் இராமனது வில்லாற்றலும், அனுமனது அலைந்து தேடும் உடல் வலிமையும் இணைக்கப்பட்டுள்ளது. இராமனது சந்தியாவந்தன சமய நிகழ்ச்சிக்கு புனித நீர் தேவைப்படுகிறது. தேடி வருவதற்கான உடல் ஆற்றல், ಎಣg) இவற்றைப் பயன்படுத்துவதற்காக இராமன், அனுமனை ஏவுகிறான்.