பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

నాజీ 騷蛋。 盜麗露發演觀踐爵器翻鑿蹈籃3。。。。。。。。。。。。。。。。*。。。•。。。。。。 71 গুঞ্জ தோன்றியது என்ற கருத்தை இப்பாடலில் காண்கிறோம். மொத்தத்தில் புனைகதைகளில் நம்பிக்கையின்மையைக் காட்டும் ஐயவாதம் இதில் காணப்படுகிறது. இந்த உப நிஷத் கதை மிகப் பிற்பட்ட காலத்தில் எழுந்தது. சுமாராக 700 கி.மு. விலிருந்து 200 கி.மு. வரை இதன் காலம் எனக் கூறலாம். இக்காலத்தில் இயற்கைச் சக்திகள். ஒரே சக்தியின் பல கூறுகள் என்று உபநிஷத் ஆசிரியர்கள் கருதினர். பிரம்மம் என்ற கருத்து தோன்றிவிட்டது. ஆயினும் பண்டையப் புனைகதைகளின் செல்வாக்கு இப்படைப்புக் கதையில் இல்லாமல் போகவில்லை. கதையின் ஆரம்பம் உலகத்தில் வழங்கிய புனைகதைகளைப் போலவே, உலகம் தோன்றாத காலத்தில் இருளும் அமைதியும் நிலைகொண்டிருந்ததாகக் கூறுகிறது. பின் படைப்புச் சக்தி இருளை விலக்கிக் கொண்டு எழுந்தது. அந்தக் காரணங்களால் மடுேமே அறியப்படக் கூடிய, சூட்சுமமானதும் அழிவற்றதுமான பிரம்மம் தனது இச்சக்தியால் இருளை விலக்கி ஒரி வீசியது. பல்லுயிர்களைத் தனது உடலில் இருந்தே படைக்க வேண்டும் என்னும் விருப்பத்தால் அது தனது நினைப்பால் நீரைப் படைத்து, தனது வித்தை அதன்மீது விடுத்தது. அவ்வித்து ஒரு பொன் முட்டையாயிற்று. அதிலிருந்து அவனே பிறந்தான். அவனே பிரம்மம். அவனே உலகின் தந்தை. நீருக்கு நாரஸ் என்று பெயர். அதுவே அவனது இருப்பிடமாக {ஆயன) இருந்ததால் நாராயணன் என்று அவனுக்குப் பெயர். ஆதிகாரனனும், அறியப்படக்கூடியவனும் உண்மையானவனும், அழிவற்றவனுமான அவனிடமிருந்து புருஷன் பிறந்தான். இவனே முதல் ஆண்மகன் ஆவான். தெய்வீகமான புருஷன் முட்டையினுள் ஒராண்டு இருந்தான். பின்னர் தனது சிந்தனையால் அதை இரண்டாகப் பிளந்தான். அதில் இருந்து இரு அரைக்கோளங்கள் தோன்றின. ஒன்றில் இருந்து சுவர்க்கமும் பூமியும் தோன்றின. இவற்றின் இடையே ஒரு பகுதியும், எட்டுத் திக்குகளும் தோன்றின. நீரில் இருந்து இவற்றைப் படைத்தான்.