பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

郵語。 發器翻磁演證密邸醯磁爵。。。。。。。。。。。。。。。 & 0 & 0 & & & с t: е з 9. ஆரியரல்லாத சமுதாயத்தினர் இந்தியாவில் வாழ்ந்து வந்தனர். அவர்களோடு கலப்பு ஏற்பட்ட பின்னர்தான், புராணங்கள் தோன்றின. வேதங்களிலும் முக்கியமற்ற தெய்வமாயிருந்த விஷ்ணுவோடு நாராயணன் என்ற (ஆரியரல்லாத மக்கள் வணங்கிய உலகைப் பாதுகாக்கும் தெய்வத்தை ஆரியப் புராண மரபு இணைத்துக் கொண்டது. இது மாடு மேய்ப்பவர்களுடைய கற்பனையே என்பது பாற்கடலில் நாராயணன் பள்ளிகொண்டிருப்பதாகக் கூறும் செய்தியே சான்று. நாகப்படுக்கையில் அவன் உறங்குகிறான். நாகம், ஒரு இனக்குழுவினரின் குலக்குறி. இது செழிப்பின் அறிகுறி. வளர்ச்சியடைந்த ஒரு மாடு மேய்க்கும் சமுதாயம், வளர்ச்சியடையாத நாகத்தைக் குலக்குறியாகக் கொண்டுள்ளவர்களை வென்றிருக்கலாம். எனவே நாராயணன் நாகப்படுக்கை மீது சயனித்திருப்பதான கற்பனை தோன்றியது. இச்சமுதாய நிலையில்தான் (வளர்ச்சியடைந்த மாடு மேய்ப்பவர் சமுதாயம் விவசாயத்திற்கு மாறுகிற நிலையில்தான்) விஷ்ணு உலகத்தைப்படைத்த படைப்புக் கதை தோன்றியது. விஷ்ணுபாற்கடலில் ஆதிசேஷன் மீது உறங்குகிறார். அவருடைய நாபியில் இருந்து ஒரு தாமரை தோன்றுகிறது. அதில் இருந்து லட்சுமியும் பிரமனும் சந்திரனும் தோன்றுகிறார்கள். பிரமன் உலகத்தைப் படைத்தான். இது போன்ற எண்ணற்ற படைப்புக் கதைகள் புராணங்களில் உள்ளன. ஆயினும் அவை எந்த அம்சத்தில் வேறுபட்டாலும் ஒரு ஆண் தெய்வம் பெண்ணின் துணையின்றியே உலகையும் மக்களையும் படைத்தது என்ற கருத்தில் ஒன்றுபடுகின்றன. கிறிஸ்தவ படைப்புக் கதையைப் புனைந்தவர்கள் இஸ்ரவேலர்கள். இவர்கள் தந்தை வழிச்சமுதாயத்தில் வாழ்ந்தவர்கள். பைபிளில் ஆதாம் தொடங்கி, ஆபிரகாம் வரை ஆபிரகாம் முதல் வரலாற்றுக்கால அரசர்களின் ஆண்கொடி வழிப்பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களுடைய படைப்பாளி ஒரே தெய்வக் கருத்தில் எழுந்த 'ஜெஹோவா என்ற தனிப்பெரும் ஆண் கடவுள் இக்கதையின் தேவன் ஆவியாக அசைந்தாடி வானையும், கடலையும் பிரித்தார். சூரியன், சந்திரன், நட்சத்திரங்களைப் படைத்தார். தாவரங்களையும், விலங்குகளையும், பறவைகளையும் படைத்தார். கடைசியில் தன்னுருவத்தில் மனிதனைப் படைத்தார். மண்ணால் உருவம் செய்து அதில் தனது மூச்சை ஊதினார். முதல் மனிதன் ஆதாம்