பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'ஒண்டொடி மகளிர் பொலத்கலத் தேந்திய
நண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்கிணி தொழுகுமதி பெரும'

(புறம், 24:31 -33 )

சேரமான் மாவெண்கோவும் பாண்டியன் கானப் பேரெயில்கடந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராச சூயம் வேட்ப பெருங்கிள்ளியும் ஒருங்கிருந்தபோது அவர்களை அவ்வையார்,

'பாசிழை மகளிர் பொலங்கலந் தேத்திய
நாாரி தேறல் மாந்தி மகிழ்சிறந்து'

(புறம், 367: 6-7)

இருப்பீர்களாக என் வாழ்த்தினார், 'வேந்தர்க்கேத்திய நீந்தண் நறவம்' (பறம், 2491-1)

அரிக்கமேடு என்னும் இடத்தை அகழ்ந்து பார்த்த போது அங்கு கி.மு. முதல் நூற்றாண்டில் யவனர் (கிரேக்க-ரோமர்) தங்கியிருந்த வாணிக நிலையம் கண்டுப்பிடிக்கப் பட்டது. அங்குக் கிடைந்த பல பொருள்களில் கிரேக்க நாட்டுச் சாடிகளும் கிடைத்தன்', அந்தர் சாடிகள் உரோம் தேசத்தில் செய்யப்பட்டவை, அக்காலத்தில் யவனர் மது பானங்களை வைப்பதற்காக உபயோகப்பட்டவை, 'யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்' என்று சங்கச் செய்யுள் கூறியதற்குச் சான்றாக இந்த யவனர் சாடிகள் உள்ளன. பாலாறு கடலில் கலக்கும் இடத்தில் தொல்பொருள் ஆய்வாளர் நிலத்தை அகழ்ந்து பார்த்த போது அவ்விடத்தில் கிடைத்த பொருள்களுடன் யவனருடைய மதுச் சாடிகளும் கண்டெடுக்கப்பட்டன. மத்தியத் தரைக்கடல் நாடுகளில் செய்யப்பட்ட இந்த மதுச் சாடிகளுக்கு 'அம்பொரே' (Amphorac) என்பது பெயர், வட இந்திய அரசர்களும் யவன மதுவை வாங்கியுண்டார். அசோக சக்கரவர்த்தியின் தந்தையான பிந்துசார மன்னன் யவன மதுவை வர வழைத்து அருந்தினான் என்று கூறப்படுகின்றது.

அரசர், வீரர், புலவர், மாலுமிகள், உழவர் முதலான எல்லா வகையான மக்களும் அக்காலத்தில் மது அருந்

109