பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைப் தாழி முதற் கலித்த கோழிலைப் பருத்தி' (அகம், 129: 6-8), 'பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும், புன்புலந்தழிஇய அங்குடிச் சீறூர்' (புறம், 304:7-8) என்றும், 'காஞ்சியின் அகத்துக் கரும்பருத்தியாக்கும் தீம்புனல் ஊரன்' (அகம், 156:6-7) என்றும், 'பருத்தி வேலிச் சீறூர் மன்னன்' (புறம், 299:1) என்றும் பருத்தி பயிரிடப்பட்டது கூறப்படுகின்றது. பருத்திக்காய் முற்றி முதிர்ந்து வெடித்துப் பஞ்சி வெளிப்பட்டபோது அவற்றைக் கொய்து கொண்டு போய் வீட்டில் வைத்தார்கள். 'கோடைப் பருத்தி வீடு நிறை பெய்த, மூடைப்பண்டம் இடை நிறைந்தன்ன' (புறம், 393:12-13)

'வில்' அடித்துப் பஞ்சியிலிருந்து கொட்டை நீக்கப் பட்டது. கொட்டை நீக்கப்பட்ட பஞ்சு வெண்மேகம் போலக் காணப்பட்டது. 'வில்லெறி பஞ்சியின் வெண் மழை தவழும்' (அகம், 133:6) கொட்டை நீக்கிய பஞ்சை நூலாக நூற்கிறார்கள். அக்காலத்தில் கையினாலே நூல் நூற்கப்பட்டது. நூலை நூற்றவர்கள் மகளிர், ஆண்மகன் ஆதரவு இல்லாத பெண்டிர் பஞ்சை நூலாக நூற்றர்கள். அவர்கள் இரவிலும் சிறு விளக்கு வெளிச்சத்தில் நூல் நூற்றார்கள். 'ஆளில் பெண்டிர் தாளிற் செய்த நுணங்கு நுண்பனுவல்' (நற்றிணை, 353; 1-2), 'பருத்திப் பெண்டின் சிறு தீ விளக்கம்' (புறம். 326:5).

நூலினால் முரட்டுத் துணிகளும் மெல்லிய துணிகளும் நெய்யப்பட்டன. குளத்தில் படரும் பாசிபோன்ற (அருண் கேணிப் பகட்டிலைப் பாசிவேர்) போன்ற நூலினால் முரட்டுத் துணிகள் நெய்யப்பட்டன. நுண்மையான நூல்களினால் மெல்லிய துணிகள் நெய்யப்பட்டன. பால் ஆவிபோன்ற மெல்லிய துணிகளும் பாம்புத்தோல் போன்ற அழகான துணிகளும், காகிதம் போன்ற மெல்லிய துணிகளும் பல வகையாக நெய்யப்பட்டன. 'இழை மருங்கறியா நுழை நூற் கலிங்கம்' (மலைபடு , 156) 'பாம்புரித் தன்ன பொன் பூங் கலிங்கம், (புறம், 397: 15), 'போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன அகன்றுமடி கலிங்கம்' (புறம், 393:17-18)

116