பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(சேரி-தெரு; நுவலும் - சொல்லும்)

'கதழ்கோல் உமணர் காதல் மடமகள்
சில்கோல் எவ்வளை தெளிர்ப்ப வீசி
நெல்லின்நேரே வெண்கல் உப்பெனச்
சேரிவிலைமாறு கூறலின்'

(அகம் , 140: 5-8)

ஆறுகளும் கால்வாய்களும் உள்ள ஊர்களில் படகுகளில் உப்பை ஏற்றிக் கொண்டு போய் விற்றார்கள். உப்பை நெல்லுக்கு மாற்றி அந்த நெல்லைப் படகில் ஏற்றிக் கொண்டு போனார்கள் என்று கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறு கின்றார்.

'கொழும் பல்குடிச் செழும்பாக்கத்துத்
குறும்பல்லூர் நெடுஞ்சோணட்டு
வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி
பணைநிலைப் புரவியின் அணைமுதற்பிணிக்கும்
கழிசூழ் படப்பை '

(பட்டினப்பாலை, 27-32)

மாட்டு வண்டிகள் போகமுடியாத பாறைகளும் மலைகளும், மேடுகளும் உள்ள ஊர்களுக்கு உப்பு மூட்டைகளைக் கழுதைமேல் ஏற்றிக் கொண்டுபோய் விற்றார்கள். அவர்கள் கூட்டமாகச் சேர்ந்து நல்ல நிமித்தம் பார்த்து வீரர்களையும் அழைத்துக் கொண்டு மலைநாடுகளுக்குப் போனார்கள். கொள்ளைக்காரர் இடைவழில் வந்து கொள்ளையிடுவதும் உண்டு. ஆகையினால் அவர்கள் தங்களுடன் வீரர்களை அழைத்துக் கொண்டு போனார்கள்,

'அணங்குடை முத்நீர் பரந்த செருவின்
உணங்குதிறம் பெயர்ந்த வெண்கள் அமிழ்தம்
குடபுல மருங்கின் உய்ம்மார் புள்ளோர்த்துப்
படையமைத் தெழுந்த பெருஞ்செய் ஆடவர்
நிரைப்பரப் பொறைய தரைப்புறக் கழுதைக்
குறைக்குளம்பு தைத்த கற்பிறழ் இயவு'

(அகம், 207:1-6)

123