பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாள்வாய் எருந்தின் வயிற்றகத் தடக்கித்
தோள்புற மறைக்கும் நல்கூர் நுகப்பின்
உளரியல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற
கிளம்பூம் புதல்வரொடு கிலி கிலி யாடும்
தத்து நீர் வரைப்பிற் கொற்கை '

(சிறுபாண், 55-62)

இதிலிருந்து கொற்கைக் குடாக் கடலில் முத்துக்கள் மலிந்திருந்தன என்பது தெரிகின்றது.

மகளிர் கால்களில் அணிகிற சிலம்பு என்னும் அணியின் உள்ளே சிறுசிறு கற்களைப் பரல் கற்களாக இடுவது வழக்கம். கொற்கைக் கடலில் முத்துக்கள் அதிகமாகக் கிடைத்தபடியால், பாண்டிய அரசருடைய அரச குமாரிகள் அணிந்த சிலம்புகளிலே முத்துக்களைப் பரலாக இட்டிருந்தனர். ஆரியப் படை கடந்த அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ் செழியனுடைய அரசியாகிய பாண்டிமா தேவியின் சிலம்பினுள்ளே முத்துக்கள் பரலாக இடப்பட்டிருந்தன என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. (வழக்குரை காதை 69).

'தாம்ரபர்ணிகம்' என்னும் முந்தை அர்த்த சாஸ்திரம் கூறுவது போலவே பாண்டிய கவாடகம் என்னும் முத்தையும் கூறுகின்றது. இந்தப் பெயரே இது பாண்டி நாட்டில் உண்டானது என்பதைத் தெரிவிக்கின்றது.

சேர நாட்டுத் துறைமுகப்பட்டினமாகிய முசிறிப் பட்டினத்திலும் முத்துக்கள் கிடைத்தன. பேர்போன பெரியாறு முசிறிக்கு அருகில் கடலில் கலக்கிற இடத்தில் முத்துக்கள் உண்டாயின. அந்த முத்துக்கள் முசிறியின் ஓர் இடமாகிய பந்தர் என்னும் இடத்தில் விற்கப்பட்டன என்று பதிற்றுப்பத்து கூறுகின்றது. 'பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம்' (பதிற்று 8 ஆம் பத்து 4 ஆம் செய்யுள்) 7 ஆம் பத்து 7 ஆம் செய்யுளில் 'பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்' 'தெண்கடல் முத்தம்' என்று கூறுகின்றது. பந்தர் என்பது அரபு மொழிச் சொல். இதன் பொருள் அங்காடி என்பது.

கவ்டல்லியரின் அர்த்த சாத்திரம் சேர நாட்டு முத்தையுங் கூறுகின்றது. அந்த முத்தை அர்த்த சாத்திரம்

131