பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செங்குட்டுவன் கடல் துருத்திக் குறும்பரை வென்றபடியால் அவன் 'கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்' என்று பெயர் பெற்றான். இவனைப் பதிற்றுப் பத்து ஐந்தாம் பத்தைப் பாடிய பரணர்,

'தானை மன்னர்
இனியா ருளரோ நின் முன்னு மில்லை.
மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது
விலங்குவரி கடவும் துளங்கிருங் கமஞ்சூல்
வயங்குமணி இமைப்பின் வேலிடுபு
முழங்கு திரைப் பனிக்கடல் மறுத்திசி னோரே'

(5 ஆம் பத்து 5: 17-22)

என்று கூறுகிறார்.
தன் தந்தையின் ஏவலின்படி செங்குட்டுவன் கடற் குறும்பரை வென்று அடக்கினான் என்பது இவற்றிலிருந்து தெரிகிறது.

குறிப்பு: கடல் தீவில் கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்டிருந்த குறும்பரும் பிற்காலத்தில் சரித்திரப் புகழ் பெற்ற வனவாசிக் கதம்பரும் ஒருவரே என்று சிலர் கருதுவர். அப்படிக் கருதுவது தவறு. கடல் தீவில் இருந்த கொள்ளைக் குறும்பர் கடம்ப மரத்தை வளர்த்ததும் , வன வாசிக் கடம்பர் கடம்ப மரத்தை வளர்த்ததும் காரணமாக இருவரும் ஒருவரே என்று கூறுவது தவறு. கடல் கொள்ளைக் காரருக்குக் கடம்பர் என்றும் பெயர் இருந்ததில்லை. வன வாசிக் கதம்பர் கடல் கொள்ளைக்காரராக இருந்ததும் இல்லை, நெடுஞ்சேரலாதனும் சேரன் செங்குட்டுவனும் வென்ற கடல் குறும்பர் கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் இருந்தவர். வனவாசிக் கதம்பர் கி.பி. ஐந்தாம் நூற்முண்டில் இருந்தவர். இருவரையும் ஒன்றாகப் பிணைப்பது தவறு. சில வரலாற்று அறிஞர்கள் கூறுவது போல கடம்பர் என்று பெயர் இருந்ததில்லை. கதம்பர் என்றுதான் சாசனங்கள் கூறுகின்றன.

கடலில் நாவாயோட்டும் தொழில் செய்பவருக்கு மீகாமர் என்பது பெயர். கப்பலோட்டும் தொழில் செய்தவர் பரதர் என்றும் பரதவர் என்றும் பெயர் பெற்றனர். அவர்கள் துறைமுகப் பட்டினங்களில் குடியிருந்தார்கள். கப்பல்கள் துறைமுகத்தையடைந்தவுடன் கப்பல்களில் தொழில்

45