பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செய்யும் மாலுமிகள் கள்ளையுண்டனர். அவர்களுக்காகத் துறைமுகங்களில் கள் விற்கப்பட்டது.

'

வேறுபன் னாட்டுக் கால்தர வந்த
பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறைக்
களிமடைக் கள்ளின் சாடி'

(நற்றிணை 295; 5-8)

துறைமுகங்களில் விற்கப்பட்ட கள்ளைக் குடித்து மாலுமிகள் மகிழ்ச்சியாக இருந்ததை மணிமேகலை கூறுகிறது.

'முழங்குநீர் முன்றுறைக் கலம்புணர் கம்மியர் துழந்தடு கள்ளின் தோப்பியுண் டயர்ந்து
பழஞ்செருக் குற்ற அனந்தர்ப் பாணி'

(மணி, 7: 20-22)

நாவாய்க் கப்பல்கள் துறைமுகத்தையடைந்தபோது அதை மக்கள் மகிழ்ச்சியோடு எதிர் கொண்டழைத்தனர் என்று பரிபாடல் கூறுகிறது.

'தாம் வேண்டும் பட்டினம் எய்திக் கரை சேரும்
ஏமுறு நாவாய் வர வெதிர் கொள்வார் போல்'

(பரிபாடல் 10: 38-39)

நாவாயில் கப்பலோட்டுத் தொழில் செய்த ஓர் இளையவன் தன் புது மனைவியைப் பிரிந்து கப்பலில் தொழில் செய்யச் சென்றான். அவனுடைய மனைவி அவன் எத்தனைக் காலங்கழித்துத் திரும்பி வருவானோ என்று மனக்கவலையடைந்தாள். அப்போது அவளுடைய தோழி அவளுக்கு ஆறுதல் கூறினாள் என்று மருதன் இளநாகனார் கூறுகிறர்.

'உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ
இரவும் எல்லையும் அசைவின் றாகி
விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்டக்
கோடுயர் திணிமணல் அகன்றுறை நீகான்
மாட வொள்ளெரி மருங்கறித் தொய்ய
ஆள்வினைப் பிரிந்த காதலர் நாள்பல
கழியா மையே யழிபடர் அகல, வருவர்'

(நீகான்-மீகாமன்)

(அகம், 255: 1-8)

46