பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யாகக் கப்பலிலேதான். ஆனால் அவள் ஆகாய வழியாகப் பறந்து சென்றாள் என்று காவியங் கூறுகின்றது. ஏன் அப்படிக் கூறுகின்றது என்பதை விளக்கி இந்நூலாசிரியர் எழுதியுள்ள 'மணிமேகலையின் விண் வழிச் செலவு' என்னும் கட்டுரையில் காண்க).[1]

கி.பி. இரண்டாம் நாற்றாண்டில் சாவகத்தீவை யர சாண்ட புண்ணியராசன், அக்காலத்தில் சோழ நாட்டுக் காவிரிப்பூம் பட்டினத்தையும் அதனைச் சூழ்ந்த நெய்தலங்கானலையும் அரசாண்ட நெடுமுடிக்கிள்ளியிடம் (இவனுக்கு கிள்ளிவளவன் என்றும் வடிவேற்கிள்ளி என்றும் பெயர் உண்டு) தூது அனுப்பினான். அந்தத் தூது வாணிகத் தொடர்பான தூதாக இருக்கக் கூடும். சாவகத்திலிருந்து பூம்புகாருக்குக் கப்பலில் வந்த தூதர் சோழனைக் கண்டனர். பிறகு அந்நகரத்தில் பௌத்த விகாரையின் தலைவராக இருந்த அறவண அடிகளையும் கண்டு, திரும்பிச் சென்றார்கள். இதனை மணிமேகலைக் காவியமே கூறுகிறது.

'கிள்ளி வளவனோடு செழுதகை வேண்டிக்
கள்ளவிழ் தாரோய்! கலத்தொடும் போகிக்
காவிரிப் படப்பை நன்னகர் புக்கேன்
மாதவன் அறவணன் இவள் பிறப் புணர்ந்தாங்கு
ஓதினன் என்றியா னன்றே யுரைத்தேன்'

( மணி, 25: 14-19)

இவ்வாறு சோழ அரசனுக்கும், சாவக அரசனுக்கும் நல்லுறவும் நட்பும் இருந்தபடியால் இரு நாடுகளுக்கும் வாணிகம் செவ்வையாக நடந்து வந்தது.

குறிப்பு: பிற்காலத்தில், இரு நாடுகளுக்கும் நிகழ்ந்த அரசியல் போர்களைப் பற்றி இங்குக் கூறவில்லை. இங்கு இப்போது நாம் எழுதுவது சங்க காலத்து வாணிகத்தைப் பற்றி மட்டுமே.


  1. பக்கம் 176-192 கட்டுரைப் பொரில் மணிவிழா மலர், கரந்தைத் தமிழ்ச் சங்கம், 1973.

60