பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலத்திலே தமிழ் நாட்டோடு வாணிகஞ் செய்த வேற்று நாட்டார் அராபியர், யவனர், சாவகர் என்று தெரிகின்றனர். அக்காலத்தில் சீன வாணிகர் தமிழகத்துக்கு (இந்தியாவுக்கு) வந்து வாணிகஞ் செய்யவில்லை. வட இந்தியாவில் கங்கை நதிப் பிரதேசத்திலிருந்தும் கலிங்க நாட்டிலிருந்தும் கப்பல் வாணிகர் தமிழகத்துக்கு வந்து வணிகஞ் செய்தார்கள்.

62