பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உபயோகப்பட்டவை. சந்தனம் சாந்தாக அரைக்கப்பட்டு உடம்பில் பூசப்பட்டது. இவை மேற்குத் தொடர்ச்சி மலை-களில் கிடைத்தன. (இவையல்லாமல் ஆரமும் அகிலும் சாவக நாட்டிலிருந்தும் கொண்டு வரப்பட்டன.)

தென் கடல் முத்து என்பது பாண்டி நாட்டுக் கடல்களில் (கொற்கை, குமரி முதலான இடங்களில்) உண்டான முத்து, பாண்டி நாட்டுக் கொற்கை முத்து உலகப் புகழ் பெற்றது.

குணகடல் துகிர் என்பது கிழக்குக் கடலில் உண்டான பவழம். (துகிர்-பவழம். குணகடல்-கிழக்குக் கடல்) சாவக நாட்டில், பசிபிக் மாக்கடல்களில் பவழப் பூச்சிகளால் உண்டான பவழங்கள் அந்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டன. (இவையல்லாமல் மத்திய தரைக் கடலில் உண்டான பவழங்களை யவன வாணிகரும் மேற்கிலிருந்து கொண்டு வந்தனர்).

கங்கை வாரி என்பது வடக்கே கங்கையாற்றங்கரை மேலிருந்த பாடலிபுரம், வாரணாசி (காசி) முதலாள ஊர்களிலிருந்து கொண்டு வரப்பட்ட பொருள்கள். அப்பொருள்களின் பெயர் கூறப்படவில்லை. காவிரிப் பயன் என்பது காவிரியாறு பாய்கிற சோழ நாட்டுப் பொருள்கள். இவை உள்நாட்டுப் பொருள்கள். இவற்றின் பெயர் கூறப்படவில்லை, இவை ஏற்றுமதிக்காக இத்துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டன.

ஈழத்து உணவு என்பது இலங்கையில் உண்டான உணவுப் பொருள்கள் (ஈழம்-இலங்கை). அந்த உணவுப் பொருள்களின் பெயரும் தெரியவில்லை.

காழகத்து ஆக்கம் என்பது காழகத்து (பர்மா தேசம்)ப் பொருள்கள். இவற்றின் பெயரும் கூறப்படவில்லை. அரியவும் பெரியவும் என்பது தமிழ் நாட்டில் கிடைத்தற்கு அருமையானவையும் விலையுயர்ந்தவையும் ஆன பொருள்கள்.

இவ்வாறு பல அயல் நாட்டுப் பொருள்கள் காவிரித் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டன என்பதைப் பழைய நூல்கள் கூறுகின்றன.

78