பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


இதே மண்டகப்பட்டுக் குகைக்கோயிலில் உள்ள வடமொழிச் சாசனம் ஒன்று,

"செங்கல், சுண்ணம், மரம், உலோகம் முதலியவை இல்லாமலே பிரம, ஈசுவர, விஷ்ணுக்களுக்கு விசித்திர சித்தன் (மகேந்திர வர்மனின் பெயர்) என்னும் அரசனால் இக்கோயில் அமைக்கப்பட்டது” என்று கூறுகிறது.

மண்டகப்பட்டுத் தவிர இதே மகேந்திர வர்மன் குடைந்த பாறைக் கோயில்கள் சென்னையை அடுத்த பல்லாவரத்திலும், காஞ்சியை அடுத்த மற்றொரு பல்லாவரத்திலும், மகேந்திரவாடி, சீயமங்கலம், மேலைச்சேரி, வல்லம் மாமண்டூர், தளவானூர், சித்தன்னவாசல் முதலிய ஊர்களிலும் உள்ளன.38

இவனுக்குப் பின் இவனுடைய மகனான மாமல்லன் நரசிம்மபல்லவனும், அவனுக்குப் பின் பரமேசுவரவர்மன் முதலியவர்களும் மாமல்லபுரம், சாளுவன் குப்பம் முதலிய இடங்களில் பாறைகளைக் குடைந்து குகைக்கோயில்களையும் தேர்க்கோயில்களையும் உருவாக்கினர்.

கற்கோயில்கள்

பாறைக்கோயில்களை அடுத்துக் கற்றளிகள் எனப்படும் கற்கோயில்களின் காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் அரசாண்ட இரண்டாம் நரசிம்மவர்மன் ஆகிய இராசசிம்ம பல்லவன் கால முதல் தொடங்கியது.

நீளமாகவும், அகலமாகவும் தேவைக்கேற்பவும் தரித்து எடுத்த கருங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்படும் கோயிலே கற்றளி. சுண்ணம் சேர்க்காமலே பெரும்பாலும் இக்கட்டடங்கள் அமைக்கப்பட்டன.39

மல்லபுரக் கடலோரமாக உள்ள கற்றளியும், காஞ்சியில் கைலாசநாதர் கோயில் என்று இப்போது கூறப்படும் இராசசிம்மேசரம் என்ற கற்கோயிலும், பனை