பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


கண்ட சர்க்கரையு மெழுகு மென்றிவை
பத்தே சிற்பத் தொழிற் குறுப்பாவன 4

சுடுமண், மச்சு, மாடம், முற்றம், முன்றில், காலதர், சாளரம் போன்ற கட்டடக் கலைச் சொற்கள் இலக்கியங் களில் நிரம்பப் பயின்று வருகின்றன. பன்னூறு ஆண்டு களாகச் சிற்ப சாத்திரம் எனப்படும் மனையடி சாத்திரத் தில் கட்டடம் கட்டுவது பற்றிய மரபுகள் சொல்லப்படு கின்றன. -

அந்த மரபுகள் வெறும் நூல் வழக்காக மட்டுமே கடைப்பிடிக்கப்படுவதில்லை. அவற்றின்படிதான் கட்டடம் கட்டப்படவேண்டும் என்பதில் மக்களுக்கு நம்பிக்கை மிகுந்து காணப்படுகிறது. கட்டடத்திற்கான மனையைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து ஒவ்வொரு நுணுக்கமான செய்தியையும் மனையடி சாத்திரம் கூறிவிடுகிறது. ஒரு கலையில் இத்தகைய நம்பிக்கைகள் அழுத்தமாகப் பதிய வேண்டுமாயின் அதன் பழமையும் பெருமையும் உறுதி செய்யப்படுகின்றன. கட்டடக் கலையின் தேவ தச்சனாக விசுவ கர்மாவும், அசுரர் மானிடர்க்கான தச்சனாக மயனும் குறிக்கப்படுகிறார்கள். வடமொழியில் கட்டடக் கலை ஒரு மதமாகவும் சாத்திரமாகவும் போற்றப்படுகிறது. அது வாஸ்து சாஸ்திரம்’ என்ற பெயரில் வழங்கப்படுகிறது. வாஸ்து’ என்ற பெயர் கட்டடக் கலையின் வழிபடு தெய்வத்தைக் குறிப்பதாகக் கருதுகின்றனர். ‘அதி தேவதை’ என்ற பெயரே இங்கு அக்கலையின் வழிபடு தெய்வமெனத் தமிழாக்கம் செய்யப்பட்டுத் தரப்படுகிறது. தமிழ் முறை சார்ந்த மனையடி நூலிலும் இக்கருத்துக் கூறப்படுகிறது. அறுபத்து நான்கு கலைகளுள் இரு வகைக் கலைப் பெயர்கள் கட்டடம் சார்புடையனவாய் வருகின்றன. நகரமைப்பைப் பற்றிய செய்திகள் சிலப் பதிகாரம் ஒன்றிலேயே மிகுதியாக உள்ளது. ஏனைய நூல்களில் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. சோழர்