பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


கட்டடங்கள் அமைக்கத் தொடங்கிய காலத்தில் - மயன்மரபு’ (இன்றைய மனையடி சாஸ்திரத்தின் மூல நெறி) அல்லது பொதுவாக ' விசுவகர்ம முறை' என்று அழைக்கப்படும் நெறி பயன்பட்டுள்ளது. 66“ மயன் விதித் தன்ன மணிக்கால் அமளிமிசை” 67 எனச் சிலப்பதிகாரத் தலைவனும் தலைவியும் அமர்ந்திருந்த கட்டில் வருணிக் கப்பட்டுள்ளது.

மண்ணினும் கல்லினும் மரத்திலும் சுவரினும்
கண்ணிய தெய்வம் காட்டுநர் வகுக்க 68

என்ற மணிமேகலை அடிகளால் - மண், கல், மரம், செங்கல் ஆகியவற்றைப் பயன்படுத்தும் வழக்கம் இருந்ததையும் அறியமுடிகிறது.69

காவிரிப்பூம்பட்டினத்து வீடுகள் எவ்வாறு கட்டப்பட்டன என்பதற்குச் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் நிரம்பிய சான்றுகள் கிடைக்கின்றன. கட்டடத்திற்கு செங்கல், ஒடு ஆகியவை பயன்படுத்தப் பெற்றமைக்குப் பின்வரும் மேற்கோள்கள் சான்று பகர்கின்றன.

சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின்
முடியரசு ஒடுங்குங் கடிமனை வாழ்க்கை 70
வம்ப மாக்கள் கம்பலை மூதூர்
சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும் 71

முன்னதில் சமுதாயக் குற்றஞ்செய்தாரைத் தலையில் செங்கல்லை வைத்து ஊர்ப்புறம் போக்கும் வழக்கம் கூறப்படுகிறது. 'சுடுமண்' என்பது செங்கல் அல்லது சுட்ட ஒடுகளைக் குறிக்கும்.

கட்டட வேலைக்குச் சுண்ணாம்பு பயன்பட்டது.

வெண்சுதை விளக் கத்துவித்தகர் இயற்றிய 72
வெள்ளியண்ண விளங்குஞ் சுதையுரீஇ 73

சுவர்கள் அழகுற அமைக்கப்பட்டன.

செம்பியன்றன்ன செஞ்சுவர் புனைந்து 74