பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

113


கோட்டை மதில்கள் அமைப்பதிலும் தமிழ் வேந்தர்கள் மிகுந்த கவனம் செலுத்தினர். பழங்கால மதில்கள் அமைப்பில் கட்டடக் கலை நுட்பமும் இயந்திரக் கலை துட்பமும் இராணுவப் பொறி நுட்பமும் சேர்ந்து விளங்கின. 80

மதிலும் கோபுரமும் சுருங்கையுமாகிய அரணுடைமை பற்றி அது அரண்மனை எனப்பட்டது. அதற்குக் கோயில், பள்ளி, நகர், மாளிகை எனப் பிற பெயர்களும் உண்டு.81

என அறிஞர் இதனை விளக்குவர்.

அரசன் முன்னிலையில் சூழ்வினை அமைச்சரும், படைத்தலைவரும், பல்வேறு ஆள்வினைத் திணைக்களத் தலைவரும், பெருங்கணியும் ஆசானும் பல்வகைப் புலவரும் பிறரும் நாள்தோறும் குழுமியிருக்கும் நிலையான இடம் அவைக்களம் 82
ஒரு தலைநகருக்கு ஐவகை அரண்கள் உண்டென்றும், அவை: மதிலரண், நிலவரண், நீரரண், காட்டரண், மலையரண் எனப்படும் என்றும் தெரிகிறது. 83

இவற்றுள் கட்டடக் கலையோடு தொடர்புடைய மதிலரண் பொதுவில் 'புரிசை' என்று கூறப்பட்டாலும், மதில், எயில், இஞ்சி, சோ என்று நால்வகைப்படும். புரிசை என்றால் வளைதல் அல்லது சூழ்ந்திருத்தல்.

மதில்

நால்வகை மதில் அரண்களில் உயரம் ஒன்றே உடை யது மதில்.

எயில்

உயரத்தோடு அகலமும் உடையது எயில்.

இஞ்சி

உயரம் அகலம் இவற்றோடு திண்மையும் உடையது இஞ்சி.