பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


திராவிடக் கட்டடக் கலையின் பல்வேறு கால நிலைகள்.

1. பழைய காலம்  : கி. பி. 500க்கு முற்பட்டது. மரம் செங்கற்களால் மட்டும் ஆன கோயில்கள்.
2. பல்லவர் காலம் : கி. பி. 600 - 900 பல்லவர் கற்றளிக் காலம்.
3. சோழர் காலம்  : கி. பி. 900 - 1800 புதிய கற்றளிக் காலம். பழைய கற்றளிகளும் புதுக்கப்பட்ட காலம்.
4. பாண்டியர் காலம் : கி.பி. 1800-1500.
5. விஜயநகரக் காலம் : கி. பி. 1500-1700.

குகைக் கோயில்களும், பாறைக்கோயில்களும் கி. பி. 600 முதல் 850 க்குள் தமிழகத்தில் முதன்முதலாக அமைக் கப்பட்டன என்று தெரிகிறது. 96 மயன், மரபு காக்கேயர் சிற்பம் முதலிய கட்டடக் கலை நூல்கள் கட்டடங்களுக் காக ஏற்கப்பட்டுள்ளமையும் தெரிய வருகிறது. 97

பொறியியல் நுணுக்கங்கள்

இக்காலக் கட்டடக் கலை வல்லுநரும் வியக்கும் சில பொறியியல் துணுக்கங்கள் பழந்தமிழர் கட்டடக் கலையில் அமைந்திருந்ததைக் காண்கிறோம்.

வேயா மாடமும் வியன்கல இருக்கையும்
மான்கட் காலதர் மாளிகை இடங்களும் 98

என்று சிலப்பதிகாரம் கூறுவதிலிருந்து பலவகை அழகிய தோற்றமுடைய பலகணிகளைப் (ஜன்னல்) பழந்தமிழர் கட்டியிருப்பதை அறிய முடிகிறது. அவற்றில் மானின் கண்போன்ற துளைகள் அமைந்த சாளரமும் ஒன்று என்று தெரிகிறது.

அரண்மனைகளில் மகர மீனின் வாயைப் பிளந்தாற் போன்ற நீர்ப்பந்தல், அமைக்கப்பட்டிருந்தது. வேனிற்