134
பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்
- (இ) வலத் தூணின் மேற்பகுதியில் காந்துவரல் எழினி. 32
இனி அடியார்க்கு நல்லார் திரைச்சீலை அமைப்பைஉரிய மேற்கோள்களுடன் நிறுவுகிறார்.
“இடத் தூண் நிலையிடத்தே உருவுதிரையாக இருப்பது ஒருமுக எழினி. இருவலத் தூண் நிலையிடத்தேயும் உருவுதிரையாக இருப்பது பொருமுக எழினி.
மேற்கட்டுந் திரையாகக் காந்துவரல் எழினியைச் செயற்பாட்டுடனே வகுத்தல் வேண்டும் 33
மேற்கட்டுத் திரையாய் நிற்பது ஆகாயசாரிகளாய்த். தோன்றுவார்க்கெனக் கொள்க. என்னை?
முன்னிய எழினிதான் மூன்று வகைப்படும்” என்றார் மதிவாணனார். 34
“அரிதரங்கிற் செய்தெழினி மூன்றமைத்துச் சித்திரத்தாற் பூதரையும் எய்த எழுதி இயற்று” என்றார் பரதசேனாபதியார். 35
மேற்கட்டியாகிய விதானத்தின் பல்வேறுசித்திரங்கள் எழுதப் படுகிற மரபும் இருந்தது. 36 உள்ளலங்காரமாக . "நல்லவாகிய முத்துமாலைகளாற் சல்லியும் தூக்குமாகத் தொங்கவிடச் செய்து அழகினால் புதுமைத்தாகச் சமைத்த அரங்கினகத்து" 37 என்று இவ்வாறு அரங்க நிருமாணம் பற்றி வருகிறது. நெடுநல்வாடையிலும் இச்செய்தி குறிப்பிடப்படுவதைக் காண்கிறோம்.
அரங்கின் 'உத்தரப் பலகை' 38 பற்றி மணிமேகலையிலும் கூறப்படுகிறது. 39
எழினி மூவகைப்படும் என்ற கருத்து சீவகசிந்தாமணியில்,