பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


சுவஸ்திகம்

ஊரின் வீதிகள் ஸ்வஸ்திக வடிவத்தில் போக்குடையவையாக இருப்பின் அவ்வூரமைப்பு சுவஸ்திகம் எனப்படும். காண அழகியதும் ஊரமைப்பிலேயே அரியதுமான் வடிவமைப்புச் சுவஸ்திகம் என்று அறிஞர் கருதுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரஸ்தரம்

ஊரின் கிழக்கு மேற்குப் பாகங்களில் வடக்குநோக்கிக் செல்லுகின்ற வழிகள் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது இருப்பின் அது பிரஸ்தரம் என்று கூறப்படும். பிரஸ்தரம் என்பது இரத்தினம்.

பிரகீர்ணம்

கிழக்கு நோக்கி நான்கு வழிகளிலும், வடக்கு நோக்கி எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது, பதினொன்றாவது, பன்னிரண்டாவது வழிகளிலும் அமைப்பு வாய்த்தால் அது பிரகீர்ண வடிவாகும். பிரகீர்ணம் என்பது வீசுகிற, சாமரம் போல் பிடிசிறுத்து மேல் விரிவது.

நந்தியாவர்த்தம்

கிழக்கு மேற்காக ஐந்து வழிகளும் வடக்கு நோக்கிப் பதின்மூன்று முதல், பதினேழுவரை வழிகளும் நான்கு. திசைகளிலும் முக்கிய வழிகளும் அமைந்தது நந்தியா வர்த்தம். இவ்வூரின் உட்புறம் நந்தியாவர்த்தமாகச் சிறுசிறு விதிகளும் சந்துகளும் அமைந்திருக்கும். இது ஒரு பூ.

பராகம்

வடக்கு நோக்கிச் செல்லுகின்ற வழிகள் பதினெட்டு முதல் இருபத்திரண்டு வரையிலும் கிழக்கு மேற்காகச் செல்லுகின்ற வழிகள் ஆறும் அமைந்திருந்தால் அதற்குப்