பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

147


பராகம் என்று பெயர். பராகம் என்றால் ஒரு மலை என்று. பொருள்படும். - -

பத்மம்

கிழக்கு மேற்கான போக்குடைய வழிகள் ஏழும் தெற்கு வடக்காகச் செல்லுகிற வழிகள் மூன்று முதல் ஏழு வரையும் அமையின் அது பத்மம் என்று கூறப்படும். பத்மமாவது தாமரைப்பூ.

ஸ்ரீபிரதிஷ்டிதம்

கிழக்கு மேற்கான போக்குடைய வழிகள் எட்டும், தென் வடலாகச் செல்லும் வழிகள் இருபத்தெட்டும் அக் கிராமத்தில் இருந்தால் அது ஸ்ரீபிரதிஷ்டிதம் எனப்படும். தெற்கு வடக்காகப் பதினாறு வழிகளும் கிழக்கு. மேற்காகப் பதினாறு வழிகளும் இருந்தாலும் அதுவும் ஸ்ரீபிரதிஷ்டிதம் எனப்படும். ஸ்ரீபிரதிஷ்டிதம் என்றால் திருமகளைத் தங்கச் செய்தல் எனப்படும்.

ஊர் வீதிகளின் அகலங்களும், அமைப்புக்களும். விரிவாக விளக்கிக் கூறப்பட்டுள்ளன. மழை நீரையும் கழிவு நீரையும் வெளியேற்றுவதற்காக நீர்த்தாரைகள் (Storm water drain) அமைக்கும் முறையும் கூறப்பட்டுள்ளது. சிற்ப நூல்களின் இவ்விவரங்கள் இன்றைய நவீன நகரமைப்பு முறையோடு பெரிதும் ஒத்து வருகின்றன.

மேலே கூறிய எட்டு வகை தவிர மயூரம் என்றொரு வகையும் இருந்திருக்க வேண்டுமென உய்த்துணரலாம். ஏனெனில், காஞ்சிபுர நகர் அமைப்பு மயிலின் உடலமைப் போடு ஒப்பிடப்பட்டுள்ளது. மேலும் நகரங்களில் எல்லாம் சிறந்தது காஞ்சி என்னும் பொருள்பட வடமொழிக் கவிஞர் பாரவி எழுதிய சுலோகம் ‘நகரேஷி காஞ்சி’ என்று கூறுகிறது.