பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


இவ்வளவு புகழ் பெற்றுள்ள காஞ்சி நகரம் மயில் போன்ற அமைப்பை உடையது என்று வியந்து கூறப்பட் டிருக்கிறதெனின் நகரமைப்புக் கலை நூல்களின் பல்வேறு பிரிவுகளில் எங்காவது மயூரபாணி’ அல்லது மயூரம் என ஓர் வடிவமைப்பு இருக்க வேண்டுமென்பது ஆய்வாளர் களின் கருத்தாக இருக்கிறது. அக்கருத்தையும் இங்கே குறிப்பிடுதல் பொருத்தமானது.

கோட்டைச் சுவர்

எல்லாவிதமான கிராமங்களுக்கும் ஊர்களுக்கும் வெளியில் புறக்காவலாக அகழி சூழ்ந்த கோட்டைச் சுவர்கள் இருக்க வேண்டும் என்கிறது ஊரமைப்பு விதி.

இப்படி முழு அளவில் உள்ள ஒரே கிராமம் தென் தமிழகத்தில் நெல்லைப் பகுதியில் உள்ள ஸ்ரீ வைகுண்டத்தின் அருகிலுள்ள கோட்டைப் பிள்ளைமார் குடியிருப்பு’ என்பதாகும். அது கோட்டைச் சுவர்கள் சூழ உள்ளேதான் உள்ளது.

ஆற்றின்கரை ஊர்

பொதுவாக ஒரு கிராமம் அல்லது ஊர் ஆற்றின்,தென் கரையில் அமைந்திருந்தால் அவ்வூர் ஆற்றின் போக்கை ஒட்டி நீண்டு அமைந்திருத்தல் வேண்டும். அதுவே நல்லிலக்கணம்.

தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களும் ஊர்களும் ஆற்றின் கரைகளிலேயே அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

ஊர்ப் பகுப்பு முறை

ஒர் ஊரை அல்லது கிராமத்தை அமைத்து உருவாக்கும்பொழுது முழு இடத்தையும் எண்பத்தொரு சதுரங்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.