பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

149


நடுவிலுள்ள இடத்தைப் பிரம்மபதம் என்று பிரித்துக் கொள்ள வேண்டும். அதைச் சுற்றிலும் உள்ள பதங் களைத் தெய்வபதம் என்று கொள்ள வேண்டும். அதைச் சுற்றியுள்ள இடங்களை மானுடபதம் என்று கொள்ள வேண்டும். இறுதியாக உள்ள பதங்கள் பைசாச பதம் எனப்படும்.

பிரம்ம பதம் நீங்கிய தெய்வ பதம் மானுட பதங்களில் மக்கள் வசிப்பதற்கான வீடுகளைக்கட்டலாம். இறுதியாக எஞ்சிய பைசாச பதங்களில் தொழிலாளர்களின் குடியிருப் புக்களைக் கட்டிக் கொள்வது வழக்கமாக இருந்து வந்தது15. ‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது தமிழ்ப் பழமொழி.

அது ஊர் அமைப்பு ஆயினும், சிற்றுார் அமைப்பு ஆயினும், நகரமைப்பு ஆயினும், கோநகரமைப்பு ஆயினும் நகரைக் கம்டுமுன் நல்ல இடத்தில் ஒரு கோயிலைக் கட்டிக்கொண்டு பிற பணிகளைத் தொடங்க வேண்டும் என்பது மயன் வகுத்த நகரமைப்பில் முதலிடம் பெறும் விதியாகும். 16

வீதிகள்

ஊரைச் சுற்றித் தேர்கள் முதலிய பெரிய வாகனங் களும் அரசர் வருவதற்கு ஏற்ற அகன்ற வீதிகள் அமைத் திருக்க வேண்டும். நகர இலக்கணத்தில் இது மிகவும் இன்றியமையாதது. இப்படி வீதிகள் அரச வீதி (இராச வீதி) என்றும் மங்களவீதி என்றும் குறிப்பிட்டுச் சிறப்பாகக் கூறப்படும். 17

ஊராயினும், சிற்றூராயினும், பேரூராயினும் எல்லா விதமான தேவதைகளுக்கும் கோயில்களை இடமறிந்து நிறுவ வேண்டும்.