பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இயல் ஆறு


பூம்புகார் நகர்


நகரமைப்புக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது பூம்புகார் நகரம். இந்நகரின் பொற்காலம் முடிந்து இது கடல் கொள்ளப்பட்டு விட்டது என்றாலும் வரலாற்றிலிருந்தும் இலக்கியங்களிலிருந்தும் இதன் அமைப்பையும், பெருமையையும் நன்கு அறிந்துகொள்ள முடிகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை முதலிய நூல்களில் இதன் சிறப்பு நன்கு தெரிகிறது.

கி. பி. முதல் நூற்றாண்டில் மேற்கு நாடுகளிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்தவர்களாலேயே காவிரிப்பூம்பட்டின நகரம் பெயர் சுட்டிப் புகழப்பட்டிருக்கிறது.

யவன ஆசிரியராகிய தாலமி என்பவர் எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ள வரலாற்றுக் குறிப்பில் 1 இது உள்ளது.

அந்நாளைய மேனாட்டு வரலாற்று ஆசிரியர் ஒருவர் எழுதிய 'பெரிப்ளுஸ்' என்னும் நூலிலும் 2 காவிரிப்பூம் பட்டினம் புகழப்பட்டுள்ளது.

'இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந நகரை ஆட்சி புரிந்த கரிகால் வளவன் என்னும் பேரரசன் காலத்தில் முழுப் பெருமையோடு வீறு பெற்றுவிளங்கிய இந்நகரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலண்டன் மாநகரம் எப்படி விளங்கியதோ அதைவிட ஆயிரம் மடங்கு