பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

159


முதலியவற்றை விற்போர், இலையமுதிடுவோர், பஞ்ச வாசம் (தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம் கப்பூரஞ் சாதியோடைந்து)11 விற்போர் முதலியவர்களும், வெண் கலத் தொழில் செய்யும் கன்னார், மரங்கொல் தச்சர், செம்பினாற் கலங்கள் செய்வோர், இரும்பினால் தொழில்கள் புரியும் கொல்லன் ஓவியர், சிற்பாசிரியர், பொற்கொல்லர், மணிகளிழைப்போர் தையல் வினைஞர், நெட்டி, துணி முதலியற்றைக் கொண்டு பறவை: பூங்கொத்து முதலிய உருவங்களைச் செய்வோர். குழல் முதலிய துளைக் கருவியாலும், யாழ் முதலிய நரம்புக் கருவியாலும், பண்ணும் திறமும் ஆகிய இசையினை வளர்க்கும் குழலர், பாணர் முதலியோர் ஆகிய பல்வகைத் தொழிலாளர்கள் வாழ்தற்குரிய இடங்களும் அமைந்திருந்தன. 12

நாளங்காடி

இனி நாளங்காடிப் பகுதியின் அமைப்பைக் காணலாம். கிழக்கே கடற்கரையை ஒட்டி அமைந்த மருவூர்ப் பாக்கமும் அடுத்து நாளங்காடியும் மேற்குப் பக்கமாகப் பட்டினப்பாக்கமுமாக இருந்த அமைப்பு காவிரிப்பூம் பட்டினத்திற்கு உரியது.

இரண்டு பாக்கங்களுக்கும் நடுவிலே அமைந்த இந் நாளங்காடி நிலப்பரப்பு மரங்களடர்ந்த சோலையாக விளங்கியது.

இங்கிலாந்தில் இலண்டன் நகரின் நடுப்பகுதியாக உள்ள ஹைட்பார்க் (Hyde Park) போல இந்நாளங்காடி அமைந்திருந்ததனால்தான் வரலாற்றறிஞர் சதாசிவ பண் டாரத்தார் 19ஆம் நூற்றாண்டு இலண்டன் நகரமைப்பை யும் இதையும் ஒப்பிட்டார் என்று தோன்றுகிறது. 13

நாளங்காடிச் சோலை பட்டினப்பாக்கத்திலுள்ளவர் களும், மருவூர்ப் பாக்கத்திலுள்ளவர்களும் தத்தமக்கு