பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

டன் பல தெருக்கள் இருந்தன. செம்படவர் வாழும் சேரிகள் இருந்தன. ஏழைகளுக்குச் சோறிடும் பல அன்ன சாலைகள் இருந்தன.

கடைத் தெரு, பண்டக சாலைத் தெரு என்று தனித்தனியே இருந்தன. அந்த நகரத்தின் இடையிடையே பல தோட்டங்கள் இருந்தன. பூஞ்சோலைகள் இருந்தன. பல பெரிய குளங்கள் இருந்தன. ஏரிகள் இருந்தன. உயர்ந்த மாடமாளிகைகள் நிறைந்திருந்தன. இவற்றைப் பட்டினப்பாலை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது.

நகரத்தில் ஆங்காங்கே பல வெட்டவெளிகள் (மைதானங்கள்) இருக்க வேண்டும். தோட்டங்களும், இளமரக்காவும் நிறைந்திருக்க வேண்டும். நகரங்களின் இடையிடையே நீரோடைகளோ ஏரிகளோ இருக்க வேண்டும். இத்தகைய நகரங்களைத்தான் நலங்கொழிக்கும் நகரமென்று கருதுகின்றனர். இத்தகைய நகரங்களிலேதான் நல்ல காற்றும் வெளிச்சமும் குடி கொண்டிருக்கும்.

இன்று புதிய நகரங்களை அமைப்போர் அல்லது நகரங்களைச் சீர்திருத்துவோர் நகரின் பல இடங்களிலும் விளையாட்டு வெளிகளும், இளமரக்காக்களும் (பார்க்) அமைக்கின்றனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த காவிரிப் பூம்பட்டினம், சுகாதாரம் நிலவுவதற்கான எல்லா அமைப் புக்களையும் கொண்டிருந்ததென்ற உண்மையைப் பட்டினப்பாலையால் நாம் அறியலாம்.76

பெரிய மாடங்களின் ஒளி விளக்குகளைக்கண்டபடியே கடலுள் புறப்படும் மீனவர் கதிரவன் எழுச்சியை நோக்குவர் என்கிறார் உருத்திரங்கண்ணனார்.77

பண்டசாலைகள்

துறைமுக நகரங்களுக்கும் பண்டசாலைக்கும். (Godown) நெருங்கிய தொடர்பு உண்டு. துறைமுகத்தை